பக்கம் எண் :

1192சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

120 தடமணி சரடொடு தாம்கூ டலவே
உணர்வுணர் வொழியின் உலகுணர் வுறின்நின்
125
பாலும் பசுவுஞ் சாலுஞ் சாலக்
கலம்பல வன்றிச் சலம்பல இலதெனக்
காணுந ரின்றி வீண்நீ விளம்பினை
ஆடியுள் நிழல்போற் கூடுதல் கூறின்
தன்நிழல் கொண்டு தற்பணஞ் சலிக்கின்
மன்நிழல் கொண்டுடல் வந்தகன் றிடுமே

தன்மையா யிருந்தாற்போலவும், கூவல் ஆழி குளம் சிறுகுழி கால்கள் பலவா
யிருந்ததாமாயினும் அவையிற்றி லுண்டாகிய தண்ணீர் ஒரு தன்மையா
யிருந்தாற்போலவும் என்று யோனிபேதங்களாயுள்ள உடல்களுக்கும் அவை
யிற்றிலே கூடிநிற்கிற பிரமத்துக்கும் உவமையாகச் சொன்னாய். அப்படியாகில்;
தடமணி சரடொடு தாம் கூடலவே - பிரகாசத்தினாலே மிகுத்திருக்கிற
மணிகளும் சரடும் தாமாகக் கூடினதில்லை, அவையிற்றை வேறே ஒருத்தன்
கோக்கக் கோப்புண்டு நின்ற தன்மைபோல உன்னுடை பிரமத்தையும் இந்த
உடல்களையுங் கூட்டினவன் வேறே ஒருத்தன் உண்டாகவேணும். அதன்றியும;்
உணர்வு உணர்வொழியின் உலகு உணர்வுறின் நின் பாலும் பசுவுஞ் சாலும்
- உன்னுடைய பிரமமானது அறியாததாயும் அது கூடிநிற்கிற தேகாதிப்
பிரபஞ்சம் அறிவேயாயும் இருந்ததாமாயின் நீ பாலையும் பசுவையும்
உவமையாகச் சொன்னது ஒக்கும். அதன்றியும் - சாலக் கலம் பல அன்றிச்
சலம் பல இலதெனக் காணுநரின்றி வீண் நீ விளம்பினை - மிகவும்
பாத்திரங்களிற் பின்னமொழிந்து ஆதித்தனிற் பின்னமில்லை யென்றும்,
கூவல் ஆழி குளம் சிறுகுழி கால்களிற் பின்னமொழிந்து சலத்திற் பின்ன
மில்லை யென்றுங் கண்டு சொல்வார்கள் சிலரையின்றி விருதாவிலே மிகவுஞ்
சில வார்த்தைகளை நீ சொன்னது திட்டாந்த விரோதமாகையால் இது
அர்த்தமாகாது; ஆடியுள் நிழற்போல் கூடுதல் கூறின் - கண்ணாடிக்குள்
நிழலானது தோய்வற நின்றாற்போலச் சரீரத்துக்குள்ளே பரப்பிரமந் தோய்வற
நிற்குமென்று நீ உன் மதத்திலே சொன்னதை நான் சொல்லுமிடத்து; தன்
நிழல்கொண்டு தற்பணஞ் சலிக்கின் மன்னிழல் கொண்டு உடல் வந்து
அகன்றிடுமே - தன்னிடத்திலே நிற்கிற