| 170 | யாம்உடைப் பதிவகை யாவரும் பலகலை சொல்லுதல் எளிதரி தத்தொழில் புரிவெனப் புல்லிய பழமொழி புதுக்கினை யன்றே அகண்டித மெனநீ பகர்ந்தமை தனக்குப் | | 175 | பந்தம் இதுவெனத் தந்தமை கருதில் வானில் நடக்குங் காலினைப் பிடித்துப் பருவிலங் கிட்ட ஒருவன் நீயன்றே பந்தம தகல 1முந்து விவேகம் வான்வளி யெனத்தனில் தானே தோன்றின் | யனுபவிக்கிறது அறிவென்று சொல்லச்செய்தே நீ இப்பொழுது உடலுக் கொழிந்து அறிவுக்கு அனுபோகமில்லை யென்கையாலே சாத்திர விரோதமும், பிரத்தியக்ஷமாக அறிவு சுகதுக்கங்களை அனுபவிக்கச்செய்தே அனுபோக மில்லை யென்கையால் பிரத்தியக்ஷ விரோதமும் இவை யிரண்டுந் தப்பாமல் உண்டாகாநிற்கும்; யாம் உடைப் பதிவகை யாவரும் பலகலை சொல்லுதல் எளிது அரிது அத்தொழில் புரிவெனப் புல்லிய பழமொழி புதுக்கினையன்றே - நாம் வத்து நிர்ணயமாக நாட்டப்பட்டது 'சொல்லுதல் யார்க்கு மெளிய அரியவாஞ், சொல்லிய வண்ணஞ் செயல்' என்று பொருந்தப்பட்ட திருவள்ளுவப்பயனிற் குறளை நீ இப்பொழுது புதுக்கினாயாகவேண்டும். நாமென்றது அலக்ஷியச் சொல். இதன்றியும்; அகண்டிதமெனநீ பகர்ந்தமை தனக்குப் பந்தம் இதுவெனத் தந்தமை கருதில் பரப்பிரமம் என்றாலுங் கண்டிக்கப்படாது அகண்டிதமாயிருப்பதொன் றென்று நீ முன்னே சொன்னதற்கு இப்பொழுது மாயாவுபாதிகளினாலே பந்திக்கப்பட்டு நிற்கு மென்று நீ சொன்னதை விசாரித்துப் பார்க்கில்; வானில் நடக்குங் காலினைப் பிடித்துப் பருவிலங்கிட்ட ஒருவன் நீ யன்றே - ஆகாயத்தின்கண்ணே வியாபரிக்கிற காற்றினைப் பிடித்து அங்கிங் கசையாத வண்ணம் பெருத்த தொருவிலங்கையிட்டு வைத்தவன் யாவனொருவன் நீ யென்று சொல்லப்படும். இது பிரமாதாவை மறுத்தது. இது அவனுடைய பெத்தமாம். மேல் அவனுடைய முத்தியை மறுக்கிறான்; பந்தமது அகல முந்து விவேகம் வான்வளியெனத் தனில் தானே தோன்றின் - பிரமம்மாயாவு பாதிகளினாலே பந்திக்கப்பட்டிருக்குமென்று சொன்ன அந்தப்
1, உந்து - பாடபேதம். |