| | முன்புள தாயின் மயங்கா திலதெனிற் பின்புள தாகா திலதுள தெனில்வெளி மலரது தரும் அனல் மரக்கண் இன்றாகித் தருவது தகுமெனில் தானே தோன்றா | | 180 | விறகின் உதித்த கனல்தகு மாயின் அவித்தையின் உதித்த வித்தை அம்மரத்து | பந்தம் பிரமத்துக்கு இப்பொழுது நீங்கத்தக்கதாக வந்து தோன்றின விவேகக் கியானம் ஆகாயத்தினிடத்திலே ஒரு வாயுத் தோன்றி அந்த ஆகாயத்தை மறைத்துநின்ற மேகங்களை யொதுக்கி அதனை நின்மல மாக்கின வாயுவைப் போல இந்த விவேகக்கியானமும் பிரமத்தினிடத்திலேநின்றுந் தானே தோன்றினதாயின்; முன்புளதாயின் மயங்காது - இந்த விவேகம் பிரமத்துக்கு முதலே யுள்ளதாயின் அது நிற்கச்செய்தே பிரமத்துக்கு நடுவே மயக்கம் வாராது; இலதெனில்இந்த விவேகம் பிரமத்துக்கு முதலேயுள்ளதல்ல நடுவே ஓர் அவதரத்திலே வந்து உண்டானதென்று நீ சொல்லில்; பின்புளதாகாது முன்பு இல்லாதது பின்பு ஓர் அவதரத்திலே யுண்டாகாது; இலது உளதெனில்- முன்பு இல்லாதது பின்பு உண்டாமென்னில்; வெளிமலரது தரும் - இல்லாதது உண்டாமென்கிறது ஆகாயத்திலே ஒரு பூஉண்டாயிற்றென்று சொல்லுதலை யொக்கும். அப்படி யன்று காணும்; அனல் மரக்கண் இன்றாகித் தருவது தகுமெனில்-அக்கினியினது பிரகாசம் மரத்தினிடத்திலே முன்பு காணப்படாம லிருந்து பின்பு ஓர் அவதரத்திலே காணப்பட்டாற்போல முன்பு இல்லாத விவேகமும் பின்பு உண்டாங்காணுமென்று நீ சொல்லில்; தானே தோன்றா - விறகினிடத்து முன்பு இல்லாத அக்கினி பின்பு உண்டாமிடத்து ஒரு அரணியை வைத்துக் கடைய உண்டானதொழிந்து தானாக உண்டாகாது. ஆகையால் உன் பிரமத்துக்கும் பின்பு உண்டாகிய விவேகக்கியானமும் வேறே ஒருத்தன் உண்டாக்க உண்டான தென்று கொள். இதன்றியும்; விறகின் உதித்த கனல் தகுமாயின் அவித்தையின் உதித்த வித்தை - அன்னுவயம்; அவித்தையின் உதித்த வித்தை விறகின் உதித்த கனல் தகுமாயின் என மாறுக. இதன் பொருள்: அறியாமையாகிய பெத்தநிலையிலே தோன்றின விவேகம் விறகினிடத்திலே தோன்றின அக்கினியை யொக்கு |