| 190 | இருளல ஒளிக்கும் ஒளியல இருட்கும் ஒருகா லத்தும் ஒருபயன் இலதால் இரண்டையும் நுகரும் முரண்தரு விழியென வித்தையும் அவித்தையும் உய்த்ததொன் றுளதே தானே தானா மானாற் பயனென் | | 195 | தன்னில் தன்னைத் தானே காணிற் கண்ணிற் கண்ணைக் காணவும் படுமே தன்நல மதனைத் தானே நுகரும் என்னின் முன்நலம் எய்தா திருந்ததென் | முன்னே அந்தகாரம் நில்லாதாற் போலவும் அந்தகாரத்தின் முன்னே ஆதித்தன் நில்லாதாற்போலவுமெனக் கொள்க; இருளல ஒளிக்கும் ஒளியல இருட்கும் ஒரு காலத்தும் ஒரு பயன் இலது - இருளல்லாத சுத்த ஒளிக்கும் ஒளியல்லாத சுத்த இருளுக்கும் ஒரு காலத்திலும் இவையிற்றுக்கு ஒருபயனும் உண்டாகாது; ஆல் - அப்படி யிருக்கையால்; இரண்டையும் நுகரும் முரண் தரு விழியென இருளோடுங்கூடி இருளை யனுபவித்தும் வெளியோடேகூடி வெளியை யனுபவித்தும் அவை யிரண்டு முதலு மாகாமல் தனியே ஒரு முதலாய் நின்ற பெரிய கண்ணினது தன்மையைப் போலவும்; வித்தையும் அவித்தையும் உய்த்ததொன்று உளதே - அறிவாயுள்ள பதியோடுங்கூடி இது பதியென்றறிந்தும் அறியாமையாயுள்ள பாசத்தோடுங்கூடி இது பாசமென்ற றிந்தும் அவையிரண்டுமல்லாமற் பசுவென்று தனியே ஒருமுதலுண்டென்று அறிவாயாக; தானே தானாமானாற் பயன் என் - இந்தப் பிரமந்தானே பிரமமானதால் இந்தப் பிரமத்துக்கு உண்டாகிய பிரயோசனம் என்னதான்; தன்னில் தன்னைத் தானே காணில் - இந்தப் பிரமமானது தன்னிடத்திலே தன்னுடைய இயல்பைத் தானே காணப்படுமாயின்; கண்ணிற்கண்ணைக் காணவும் படுமே - கண்ணானது தன்னிடத்திலே தன்னுடைய சொரூபத்தைத் தானே காணுமென்று சொல்லவும் படுமே ? அது உண்டாகாது. ஆகையால் நீ பிரமம் தன்னிலே தன்னைக் காணுமென்று சொன்னது அர்த்தமன்று. இதன்றியும்; தன் நலமதனைத் தானே நுகரும் என்னின் - பிரமம் தன்னிடத்தி லுண்டாகிய சுகத்தைத் தானே அநுபவியாநிற்குமென்று நீ சொல்லில்; முன் நலம் எய்தா திருந்தது என் கட்டிபோலெனக் கதறினை - பிரமம் |