| 200 | கட்டி போலெனக் கதறினை இன்பம்வந்து 1ஒட்டிடும் வத்தை யுடையையா யிடினே | 205 | தத்துவ மசியென வைத்தமுப் பதத்திற்கு ஒன்றே பொருளென் றன்றே பகர்வது நீபுலி யாயினை யென்றாங் குணரில் ஆயினை என்றதும் ஆகு வமைத்தால் நோயா யினமெனல் ஆயா யென்றால் அகமே பிரம மாயின தென்றால் | இந்தப் பெத்தமுண்டாவதற்கு முன்னே தன்னிடத்தி லுண்டாகிய சுகத்தைத் தான் அனுபவியாம லிருப்பானேனென்று நான் கேட்டதற்குக் கருப்புக் கட்டியானது தன்னிடத்தி லுண்டாகிய இரதத்தைத் தான் அனுபவியாம லிருந்தாற்போலுமென்று நீ கத்தினாய்; இன்பம்வந்து ஒட்டிடும் வத்தை யுடையை ஆயிடினே - அந்தப் பிரமத்தி லுண்டாகிய சுகம் உனக்கு இந்த முத்தியிலே யனுபோகமானது நீ தனியே பசுவென்று ஒரு முதலாய் அதிலே பாச பந்தியாயிருந்து இப்பொழுது அந்தப் பாசம் நீங்கிப் பதியோடு கூட்டு கையினாலேயெனக் கொள்க; தத்துவமசியென வைத்த முப்பதத்திற்கு - தத் அது துவம் நீ அசி ஆகிநின்றா யென்கிற மகாவாக்கியத்துக்குப் பொருள் விசாரிக்குமிடத்து; ஒன்றே பொருளென் றன்றே பகர்வது - ஒன்றேயா யிருக்கும் இதற்கு அர்த்தமென்றல்ல அந்த மகாவாக்கியஞ் சொல்லுவது. பின்னை எங்ஙனே யென்னில்; நீ புலியாயினை யென்று ஆங்கு உணரில் - ஒருவன் ஒருவனுடைய வீரத்தைக் கண்டபொழுது நீ புலியாயினை யென்று அவன் அங்ஙனஞ் சொன்ன சொல்லை விசாரித்துப் பார்க்கில்; ஆயினை என்றதும் ஆகு உவமைத்தால் ஆயினையென்றதற் குவமைத்தேயென்று லக்ஷணைவிதியிற் சூத்திரங்கள் சொல்லுகையினால் அவன் புலியா கின்றானல்லன். இதன்றியும்; நோயாயின மெனல் ஆயாய் - ஒருவன் ஒருவனைப் பார்த்து நீ இப்படிப் பொல்லாதா யிருப்பானேனென்ன நாம் நோயாய்க் கிடந்தோம் கண்டீரேயென்று அவன் சொன்ன சொல்லுக்கு அர்த்தத்தை நீ தானே ஆராய்ந்து பாராய். அவன் கொண்ட வெதுப்புக் குளிர் அவனாகிறதில்லையே; என்றால் - அப்படியிருக்கையால்; அகமே பிரமமாயின
1. ஒட்டும் வித்தையை - பாடபேதம். |