பக்கம் எண் :

1206சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

230 பொறியோ போத நெறியோ இதுபவம்
நீங்கிடும் நெறிதரு பாங்கினைப் பழித்தல்
235
 
நன்றி கொன்ற லன்றே அன்றியும்
ஞால நீயேயும் நான்மறை நீதியும்
பாலர்உன் மத்தர் பசாசரி லெனவும்
உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவும்
தானே தவிரா தானாற் புரியாது
ஒழிந்திடின் நிரயத் தழுந்துதல் திடமே

பிரமக்கியான முண்டாயிற்று எங்களுக்கு ஆசாரம் வேண்டுவதில்லை யென்று
அனாசாரங்களைச் செய்துகொண்டு திரிகிற இது; பொறியோ போத நெறியோ
- இவர்களுடைய தலையிலெழுத்தோ அல்லது அறிவுக்கீனந் தானோ; இது
பவம் நீங்கிடும் நெறிதரு பாங்கினைப் பழித்தல் இவனைவிட்டு ஒரு
காலத்திலும் நீங்காமல் தொந்தித்துக்கொண்டு வருகிற பிறவித் துன்பங்கள்
நீங்குகைக்கு ஏதுவாயுள்ள இந்தக் கன்மத்தின் பகுதிகளை எனக்கு ஆகாது
இதுவென்று இதனைக்கைவிட்டு விடுகிற இது; நன்றி கொன்ற லன்றே -
ழுஎந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லைச், செய்ந்நன்றி
கொன்றமகற்கு' என்று திருவள்ளுவதேவர் சொன்ன செய்ந்நன்றி கொன்ற
இதுவா யிருக்கும். விரதத்துதித்த விவேகமதழித்தல் நன்றிகொன்ற லன்றே
யென்று பொருள் கூட்டுக; அன்றியும் ஞானநீதியும் நான் மறை நீதியும் -
இதன்றியும், லோகாசாரங்களும் நாலு வேதத்திற் சொல்லப்பட்ட
ஆசாரங்களும் இவை; பாலர் உன்மத்தர் பசாசரி லெனவும் உறங்கினோன்
கைவெறும் பாக்கெனவும் தானே தவிராது - யாதொன்றையும் விகற்பியாமல்
நிருவிகற்பமாகக் காண்கிற பாலரைப்போலவும், வைதாரையும்
வாழ்த்தினாரையுஞ் சுட்டியறியாத மதுபானஞ் செய்தவர்களைப்போலவும்,
ஆகாரம் நித்திரைபயம் மைதுனமென்கிற நாலுகாரியமுமில்லாத பசாசரைப்
போலவும், நித்திரை செய்கிறவன் கையிலேபிடித்திருந்த பாக்குப்போலவும்
உனக்குப்பிரமக்கியான மில்லாதபடியினாலே அந்த ஆசாரங்களும் தானாகப்
போக அறியாது; ஆனால் புரியாது ஒழிந்திடின் நிரயத்து அழுந்துதல் திடமே
- அவைதானே போகாதென்றால் இவன்தானே எனக்கு அந்த ஆசாரங்கள்
வேண்டுவதில்லை யென்று விட்டால் தேகாந்தத்திலே மீளா நரகிலே