பக்கம் எண் :

1211


6. ஐக்கியவாதி நிராகரணம்

முத்தி என்பதை எவனோ சுத்த
அறிவெனிற் பாசம் செறியா மாயை
உருஇரு வினையால் வரும்இரு வினையும்
உருவா லன்றி மருவா திவற்றின்
5 முந்திய தேதோ வந்தணை வதற்கோர்
ஏது வேண்டும் தான்இயல் பென்னின்

தன்னுடைய அறிவு கூடி ஐக்கியம் பிறந்து ஒன்றுபட்டு நிற்கும்; என்பதை
யுலகோர் நன்றா முத்தியென நவிற்றினரே - என்று இங்ஙனஞ் சொல்லப்
பட்டதை உயர்ந்தோராயுள்ளவர்கள் முத்திகளெல்லாவற்றிலும் வைத்துக்
கொண்டு இதுவே நல்ல முத்தியென்று சொல்லா நிற்பார்கள்.          5

     மேல் பாடாணவாதி மறுக்கிறான்:

     (உரை) முத்தி யென்பதை எவனோ - இதை நீ முத்தி யென்று
சொன்னது என்னதான், அது பின்பு சொல்லுகிறோம்; சுத்த அறிவெனிற்
பாசம் செறியா - ஆன்மா அனாதியிலே சுத்தமுமாய் அறிவுமா யிருக்கு
மென்று சொல்லின் நடுவே ஓர் அவதரத்திலே சுத்தமாயிருக்கிற
ஆன்மாவைப் பாசம் வந்து பொருந்துகைக்கு வழக்கில்லை; மாயையுரு
இருவினையால் வரும் - இந்த மாயா சரீரமானது இவனை வந்து பொருந்து
மிடத்து இவன் முன்னே செய்த புண்ணிய பாவங்களுக் கீடாக வந்து
பொருந்துவ தொழிந்து தானாக வந்து கூடாது; இரு வினையும் உருவாலன்றி
மருவாது - அந்தப் புண்ணிய பாவங்கள்தான் உண்டாமிடத்து ஒரு மாயா
சரீரமுண்டாய் அதிலுண்டாகிய திரிவிதகரணங்களினாலே இவன்செய்து
கொள்ள உண்டாவதொழிந்துதானே யுண்டாகாது. ஆகையால்; இவற்றின்
முந்தியது ஏதோ - இந்த மாயை கன்ம மிரண்டினும் வைத்துக்கொண்டு
இவனை முந்த வந்து கூடின பாசம் எதுதான்? இதன்றியும்; வந்து
அணைவதற்கு ஓர் ஏது வேண்டும் - இந்தப் பாசங்கள் நடுவே ஓர்
அவதரத்திலே இவனைவந்து பொருந்துமென்பதற்கு அனாதியிலே இவனுக்கு
மலமென்ப தொன்று உண்டாய் அது காரணமாக வந்து கூடிற்றென்று சொல்ல
வெண்டும்; தான் இயல்பென்னின் - அப்படி மலமென்பது ஒன்று