பக்கம் எண் :

1214சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

25 குறிகொ ளாளர் அறைகுவ ரன்றே
அறிவிற் கறிவு செறியவேண் டின்றே
30
 
உண்மையில் இருமையும் ஒளியே எனில்ஒரு
தன்மை யாகமுன் சாற்றின ரிலரே
முன்பு நன்றுடன் ஒன்றிய காலை
இன்பம் எய்துதற் கிலதுயிர் ஆதலின்
நீயலை பொருத மாயா வாதி
ஆயினை அமையும் அருள்நிலை கேண்மதி.     6

மயக்கம் வந்தது அறியாமைகொண்டு என்று சொல்லில்; அது மலமாக்
குறிகொளாளர் அறைகுவரன்றே - அப்படி அறியாமையென்று நீ சொன்னது
தன்னைக் காண் ஆணவமலமாகக்கொண்டு திரிபதார்த்த நிண்ணயம் வந்த
பெரியோர்கள் சொல்லுவார்கள். அன்றென்றது ஆமென்றதெனக் கெள்க.
இது ஐக்கியவாதியுடைய பெத்தநிலையை மறுத்தது.

     மேல் முத்தி நிலையை மறுக்கிறான்: அறிவிற்கு அறிவு செறிய
வேண்டின்றே - ஆன்மா அறிவேயாயிருக்கில் வேறே ஓரறிவோடே சென்று
கூடவேண்டுவதில்லை. இதன்றியும்; உண்மையில் இருமையும் ஒளியே யெனில்
- முத்தியில் நீரும் நீரும் கூடினாற்போலப் பதியும் பசுவும் இரண்டுங் கூடிப்
பிரகாசமாயிருக்குமென்று நீ சொல்வில்; ஒரு தன்மையாக முன் சாற்றினர்
இலரே - அவன் சர்வக்கியன் இவன் கிஞ்சிக்கியன், அவன் பரிபூரணன்
இவன் ஏகதேசி, அவன் நிர்மலன் இவன் மலசகசன், அவன் பதி இவன்
பசு: இப்படி யிருக்கையால் சிவனையும் ஆன்மாவையும் ஒரு தன்மையாகக்
கொண்டு இதற்கு முன்பு ஒருவருஞ் சொன்னவர்களில்லை; முன்பு நன்றுடன்
ஒன்றிய காலை இன்ப மெய்துதற்கு இலது உயிர் ஆதலின் - அனாதியே
சுத்தமாயிருக்கிற ஆன்மா பின்பு கூடின அசுத்தங்கள் நீங்கி முத்தியிற்
சிவனோடு கூடி இன்பத்தை அனுபவிக்குமென்றாய். இந்த மாயா கன்மங்கள்
கூடுதற்கு முன்னே ஆன்மா சிவனோடு கூடி நிற்கச் செய்தே இன்பத்தை
அனுபவிக்கக் கண்டோ மில்லையே. ஆகையால்; நீயலை பொருத
மாயாவாதியாயினை அமையும் அருள்நிலை கேள்மதி - நீயும் பிரமந்தானே
குடாகாச மாகாசம் போல நின்று இந்த உடல் நீங்கின அவதரத்து இரண்டு
பிரமமும் ஒன்றாய் நிற்குமென்று