பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1223


15 எய்தல் ஆகா மெய்யுறு பொருட்கு
முன்னர்க் கீடந் தன்னென எடுத்த
வேட்டுவன் இயல்பு கூட்டல் பெறாதே
வண்டிறும் பெடாஉட் கொண்டது தனக்கு
20 மந்திர வாதந் தந்ததும் இலதே
எடுத்திடும் அதனால் அடுத்ததென் றறையிற்
கருமயிர்க் குட்டி இருசிறைப் பறவை
யாயின தெடுத்த தாயர்சாற் றிலரே
பிறவிப் பேதத் துறையிவை கிடக்க

     மெய்யுறு பொருட்கு முன்னர்க்கீடந் தன்னென எடுத்த வேட்டுவன்
இயல்பு கூட்டல் பெறாதே - நீ சிவனோடேகூடி ஒன்றுபட்டிருக்கிற
முத்தித்தன்மைக்கு முன்னே ஒன்று மறியாமற் கிடக்கிறபச்சைப் புழுவைத்
தன்னுடைய சொரூபமாக வேணுமென்று சென்றெடுத்த வேட்டுவாளியினது
இயல்பு உவமையாகக் கூட்டிச் சொல்லுகிறது பெறாது; வண்டு இறும்பு எடா
உட்கொண்டு அது தனக்கு மந்திரவாதந் தந்ததும் இலதே - சிவன் இந்த
ஆன்மாக்களுக்கு மந்திரவாதந் தந்ததும் இலதே - சிவன் இந்த
ஆன்மாக்களுக்கு மந்திர வுபதேசங்களைச்செய்து தற்சொரூபமாக்கினாற்போல
வேட்டுவாளி புழுவையெடுத்துக் கொண்டுபோய்த் தன்னுடைய கூட்டுக்குள்ளே
வைத்து ஒரு மந்திர உபதேசங்களைச்செய்து தற்சொரூபமாக்கினதாகச்
சொல்லப்படாது. ஆகையால் நீ வேட்டுவாளியையும் புழுவையும் முத்திக்கு
உவமை சொன்னது அர்த்தமாகாது; எடுத்திடும் அதனால் அடுத்ததென்று
அறையில்-அப்படியன்றுகாணும், அந்த வேட்டுவாளிசென்று எடுத்துதான்
உபதேசமாக அந்தப் புழு தற்சொரூபமானதென்று நீ சொல்லில்; கருமயிர்க்
குட்டி இருசிறைப்பறவையாயினது எடுத்த தாயர் சாற்றிலரே - கருமை
பொருந்தியிருக்கிற மயிர்க்குட்டிப் புழுவானது தனது வாயில் நூலாலே
கூடுகட்டி அதற்குள்ளே யிருந்து சிலநாட்சென்ற பிறகு பெரிய சிறகினை
யுடைய பறவையாய்ப் பறந்துபோன இதற்கு ஒரு தாயார் வந்தெடுத்து
அது உபதேசமாக இது பறவையானதென்று ஒருத்தர் சொல்லுவாரில்லை.
ஆகையால்; பிறவிப் பேதத்துறை இவை கிடக்க-புழு வேட்டுவாளியானதும்
மயிர்க்குட்டி பறவையானதும் கன்மத்துக்கீடாக அச்சுமாறிப்போனது, முத்திக்கு
உவமையாகாது. ஆகையால்