- புன் குரம்பை ஏலக்குடி புகுந்த எம்மனோர்க்கு உண்மைதரு நீலக்குடி விலங்கு நிஷ்களமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மனோக்ஞ நாதசுவாமி திருக்கோயில் திருநீலக்குடி & அஞ்சல் - (வழி) கும்பகோணம் திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம் - 612 108. 150/33. வைகல் மாடக் கோயில் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். ஊர் - வைகல். கோயில் - மாடக்கோயில். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி, “நாட்டார் வாய்க்காலைக் கடந்து, பழியஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். ‘நாட்டார் வாய்க்கால்’ மீது உள்ள பாலம் குறுகலானது. ஆதலின் பேருந்து செல்லாது - நடந்தே செல்ல வேண்டும். இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன :- 1) விசுவநாதர் ஆலயம் :- ஊரின் தென்பால் உள்ளது. ‘வளநகர்’ என்று இப்பகுதி வழங்குகிறது. (திருமால் வழிபட்டது.) 2) பிரமபுரீசுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில். (பிரமன் வழிபட்டது) 3) வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில். பாடல் பெற்றது. இறைவன் - சண்பகாரண்யேஸ்வரர், வைகல்நாதர் இறைவி - சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை. தலமரம் - சண்பகம். (தற்போதில்லை) |