திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள தலங்கள் 1. திருப்பெருந்துறை * 2. தில்லை 3. உத்தரகோசமங்கை * 4. திருவண்ணாமலை * 5. திருக்கழுக்குன்றம் * 6. திருத்தோணிபுரம் * 7. திருவாரூர் என்பன., இவற்றுள் * இவை திருமுறைத்தலங்களாகவும்
- இவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு தலங்களாகவும் இடம் பெற்றுள்ளன. இவையன்றித் திருவாசகத்தில் குறிக்கப்பெறும் தலங்களாக அறியப் படுபவை வருமாறு:- 1. மகேந்திரமலை 2. பஞ்சப்பள்ளி 3. நந்தம்பாடி 4. குடநாடு 5. வேலம்புத்தூர் 6. சாந்தம்புத்தூர் 7. மதுரை 8. திருப்பூவணம் 9. திருவாதவூர் 10. பூவலம் 11. திருவெண்காடு 12. பட்டமங்கலம் 13. ஓரியுர் 14. பாண்டூர் 15. தேவூர் 16. திருவிடைமருதூர் 17. கச்சி ஏகம்பம் 18. ஸ்ரீ வாஞ்சியம் 19. கடம்பூர் 20. ஈங்கோய் மலை 21. திருவையாறு 22. திருப்பூந்துருத்தி 23. திருப்பனையூர் 24. திருப்புறம்பயம் 25. சந்திரதீபம் 26. குற்றாலம் 27. பாலை 28. கல்லாடம் 29. மொக்கணிச்சுரம் 30. கூடல் (மதுரை) 31. திருப்பராய்த்துறை 32. திருச்சிராப்பள்ளி 33. கோகழி 34. திருப்பழனம் 35. இத்தி 36. மலைநாடு 37. அவிநாசி. இவற்றுள் சில திருமுறைத் தலங்கள். ஏனையவற்றுள் பல பெயர்கள் எவ்வெத்தலங்களைக் குறிக்கின்றன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. திருவாதவூர் மாணிக்கவாசகருடைய அவதாரத்தலம். |