பக்கம் எண் :

100

  ஜென்மசஞ் சிதவிடந் தீண்டி மாண்டதிங்
கென்மதி யிரக்ஷணைக் கினியென் செய்குவேன்
முன்மய வளற்றிடை முழுகி யும்மினும்
நன்மதி படைத்திலே னாச மெய்தவோ.

46
   
  மோகமார் பிரபஞ்ச மயலின் மூழ்கிலௌ
கீகமார்க் கத்திலே கெடுவ லோவெனாச்
சோகமுற் றுளங்கசந் தழுது துக்கவெஞ்
சாகரத் தழுந்தினான் றரிப்பொன் றின்றியே.
47
   
  அவ்வயிற் குரவனு மருளி நிற்கொரு
கௌவையின் றாகுக கருணை யெம்பிரான்
எவ்வகைப் பாவமுஞ் சமிப்ப ரேழைநீ
செவ்விசு வாசத்திற் றிடங்கொள் வாயென்றான்.
48
   
  உற்றவிம் மொழிவழி யுயிர்வந் துற்றெனச்
சற்றுளந் தெறிந்துநம் மிறைவன் தண்ணருட்
பெற்றியை நினைந்தியான் பிழைக்கு மாறினி
இற்றென் நவிற்றுகென் றிறைஞ்சி நின்றனன்.
49
   
  இங்கிவன் பரிவுறு நிலையு மின்னலுஞ்
சங்கையின் றாகநன் குணர்ந்து தாபத
புங்கவன் வேதிய பொருந்தக் கேளெனாப்
பங்கமின் மதிசில பகரு வானரோ.
50
   
  இந்நெறிப் படுத்துனை யேய்த்த லௌகிகன்
தன்னையான் முன்னரே யறிவன் சற்பனை
மன்னுமிச் சாபுர வாசி நன்னெறி
துன்னியோர்க் கவமதி புகலுஞ் சூழ்ச்சியான்.
51
   
  சாலமே மிகுதரு மாபு ரிக்குவந்
தாலயம் புகுந்துமெய் யடிய ராமெனக்
காலையு மாலையும் பரவு கைதவன்
ஞாலமீ திசையலா னாட்ட மொன்றிலான்.
52
   
  மீயுற வேதியர் வேடந் தோன்றிடும்
வாயுற மறைத்திரு வசனம் வந்திடும்
வீயுறா வறுவகை விகார மும்மலந்
தீயுறு மனத்திடைச் செறிந்து நிற்குமால்.
53