|
கள்ளஞா
னியரிவர் கழறும் வார்த்தையில்
எள்ளள வும்பய னிலைமற் றென்மொழி
உள்ளவா றென்பதற் குயர்ந்த வானமும்
பள்ளநீ ருலகமும் பகருஞ் சான்றரோ.
|
62 |
|
|
|
|
சான்றென
மொழிந்திடு தருணந் தம்பிரான்
தோன்றியிங் குரைத்தகற் பனைகள் சோர்வற
ஊன்றிநின் றொழுகியீண் டுய்வல் யானென
ஏன்றவன் சாபமே யெய்தி மாள்குவன்.
|
63 |
|
|
|
|
என்றிடி
யேறென விசைத்த வாசகந்
துன்றிய கொழுங்கனற் சுவாலை மீக்கொள்வெங்
குன்றினின் றெழுந்துளங் குலையும் வேதியன்
தன்றுணைச் செவிவழி புகுந்து தாக்கிற்றால்.
|
64 |
|
|
|
|
தாக்கலுஞ்
சாவலாற் றனக்கு வேறினிப்
போக்கிலை புறத்தொரு புகலு மின்றெனா
வாக்கொடு மனந்தடு மாறி வாய்வெரீஇ
மீக்கிள ருயிர்ப்பொடும் விளம்பு வானரோ.
|
65 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
வஞ்ச
லௌதிக வாய்மொழி யாங்கொடு
நஞ்ச நுங்கிம யங்கியெ னன்மதி
துஞ்சி யாருயிர் சோர்குவ னாலினி
உய்ஞ்சி ருக்கவொ ருமருந் துண்டுகொல்.
|
66 |
|
|
|
|
ஈசன்
கோபமெ ரிக்குமென் றேழையேன்
நாச தேசந்து றந்தது நன்மனைப்
பாசம் வீசிய பான்மையு மித்தனை
மோச மெய்திமு ழங்கனன் மூழ்கவோ.
|
67 |
|
|
|
|
மேதை
யற்றவி வேகம்மி குத்தவோர்
பேதை யென்னிற்பி றரிலை பெட்புறும்
ஊதி யத்தையொ ரீஇயுல வாப்பெருஞ்
சேத மெற்கெனக் கொண்டதி றத்தினே.
|
68 |
|
|
|
|
பாதை
விட்டுநம் பார்த்திவ னாணையைப்
பேதை நீபிழைத் தாய்பெருங் குற்றமென்
றோதி யென்னையு வர்க்குமு ளக்கரி
வாதை கொண்டுயிர் வாழ்வதெவ் வாறினி.
|
69 |