|
என்று
சிந்தித்த ருகுற வேழைகாள்
நின்று தட்டுமி னீங்கிடு நீள்கத
வென்று பித்தியெ ழிலுறத் தீட்டிய
மன்றல் வாசகங் கண்டும னக்கொளா.
|
7 |
|
|
|
|
திட்டி
வைத்தனர் தேவர்பி ரானென
உட்டெ ளிந்துணர் வொன்றியொ டுங்கியே
கிட்டி யாங்குகி ளர்பொற்க பாடத்தைத்
தட்டி னானின்றி னையன சாற்றியே.
|
8 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
மாய
வுலக மயக்கறுத்து வரையாக் கிருபை தந்தளித்த
தூய பெருமான் றிருவடிக்குத் தொழும்பன் கபாடந் திறமினோ.
|
9 |
|
|
|
|
ஆசா
பாசக் கொடுஞ்சுழலி லகப்பட் டுலைந்தே னருளணுக
நாச தேசந் துறந்துவந்தே னாயேன் கபாடந் திறமினோ.
|
10
|
|
|
|
|
உள்ளந்
திரும்பிக் குணப்படுமி னுய்வீ ரென்ன வுவந்துரைத்த
வள்ளல் திருவாக் கதுகேட்டு வந்தேன் கபாடந் திறமினோ.
|
11
|
|
|
|
|
கல்லேன்
சுருதி நலம்புரியக் கருதேன் பாவங் கசந்திடேன்
பொல்லேனெனினும் வந்தடைந்தேன் போகேன் கபாடந்
திறமினோ.
|
12 |
|
|
|
|
ஆறாக்
கொடிய பசிதாக மடங்கத் தணிய வருளளிக்கும்
மாறாக் கருணை வரதன்பால் வந்தேன் கபாடந் திறமினோ.
|
13
|
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
பாவ
மீறிவளர் காடு துற்றியலை பட்ட ழுங்கியயர் பாவியான்
ஜீவ மாநதியி னீர ருந்தவதி தேட்ட முண்டுகடை திறமினோ.
|
14 |
|
|
|
|
நீதி
யாதிபர்சி னந்த ஹிக்குநெறி நின்று தப்பியிநெ றிப்படீஇ
மாத யாபரன டித்தொ ழும்புசெய வந்த பாவிகடை திறமினோ.
|
15 |
|
|
|
|
சேரு
மாகொடிய தீவி னைத்திரள்சு மந்தி ளைத்தளிகொள்
ஜீவநற்
றாரு நீழலிலொ துங்கி யுய்யவரு தமியன் யான்கதவு திறமினோ.
|
16
|
|
|
|
|
கொடிய
ரிற்கொடிய புலைய ரிற்புலைய னாயி னுங்குமர நாயகன்
அடிய ருக்கடிய னாக வந்திவண டைந்த னன்கதவு திறமினோ.
|
17
|
|
|
|
|
நிருப
னீதியினி லத்தி ழிந்துபலி நேர்ந்தி ரக்ஷையரு ணேமியாஞ்
சருவ லோகசா ணியனை நம்பிவரு தமியன் யான்கதவு
திறமினோ. |
18
|