பக்கம் எண் :

111

  நேர்வழிநெ ருக்கவழி நின்மலந கர்க்குச்
சேர்வழிதி கைப்பில்வழி ஜீவவழி சீர்சால்
ஒர்வழியி தன்றியிலை யுண்மைவழி கும்பிப்
பேர்வழிய துற்றலைபி ராந்தரும நேகர்.

51
   
  இக்குறிம னக்கொடினி யேகுகென வுள்ளம்
நெக்குருகு நேயனொடு வேதியனி கழ்த்துந்
தக்கநெறி சார்வலைய தாங்கரிய தாமிப்
பொக்கணம்வி ழுத்திலது புண்ணியமு னக்கே.
52
   
                    வேறு
   
  நினை வில்லைவெரி்ந் மீதறவு மேன்மேல்
ஏறுசுமை யான்மிகவி ளைத்தனனெ னக்கோர்
ஆறுதலு மில்லையினி யஞ்சலென நின்போல்
தேறுதல்செய் வாருமெதிர் வார்கொல்தெரி யேனால்.
53
   
  யாதினியி யற்றுவலி ரக்ஷைபெற வென்னா
ஓதலும்ம லங்கலையி ருங்குருசு யர்த்த
மாதலம டுக்கினுன வன்சுமடு வல்லே
போதரும லாதொருவர் போக்கமுடி யாதால்.
54
   
  இப்பகல்க ழிந்திடுமுன் னிந்நெறியி னோர்சார்
மெய்ப்பொருள்வி ளக்குபவன் வீடெதிர்வை யங்குற்
றப்பனுவ லாளனோட மர்ந்துவின வுங்கால்
எப்பரிசு நன்குறவி சைப்பனியல் பென்னா.
55
   
  சோகமற நன்மொழிதொ கத்தினைய கூறி
ஏகுகென வாசிவிடை யீந்தனன்வி சாரி
ஓகையொடு மஞ்சலியொ ழுக்கமுறை நல்கி
மாகநக ராதிபனை வாழ்த்திவழி போனான்.
56
   
               கடைதிறப்புப் படலம் முற்றிற்று.
   
 
வியாக்கியானி யரமனைப் படலம்
 
   
  இந்தவா றாயவன் னேகுமவ் வமைதியில்
உந்துநல் லுணர்வுமுன் னூன்றிநின் றீர்க்கவும்
பந்தமார் தீவினைப் பகுதிபின் னீர்க்கவுஞ்
சிந்தைநொந் தினையன செப்புவா னாயினான்.
1