பக்கம் எண் :

113

  ஆற்றருஞ் சுமையினோ டல்லல்பல் விக்கினங்
கூற்றெனக் குமுறிநின் றுயிர்தெறக் குறுகினும்
ஏற்றுமுன் னிடுவதே கருமமிங் கேழையேற்
கூற்றமாங் கடவுள்வேந் தொருபெருங் கருணையே.
10
 
  என்னவின் னனபல வின்னல்கொண் டிடையிடைத்
துன்னுநல் லுணர்வொடே சுமைசுமந் தலசியும்
முன்னவன் றிருவருட் டுணைமையான் முன்செலீஇச்
சொன்னவப் பனவன்வீ டணுகினான் றுருசிலான்.
11
 
  மற்றிதே போலுமால் வாயில்கா வலன்விதப்
புற்றமெய்க் குரவன்வா ழுறையுளென் றுவகைபூத்
தற்றமென் னெனவினா யகநுழைந் தவணுறு
நற்றவக் கிழவனைக் குறுகினா னவிலுவான்.
12
 
  உள்ளவோர் கடவுள்வேந் துலகயாத் திரிகனான்
வள்ளனின் மொழியினான் மறைபுலப் படும்வழி
தெள்ளிதி னுணர்வையங் கேகெனச் செப்பினான்
கள்ளமில் வாயில்கா வலனெனக் கழறினான்.
13
 
  கேட்டலு மறைவியாக் கியானிநீ கேவல
நாட்டுயாத் திரிகனோ நன்றுநின் வரவெனா
வீட்டுளங் கங்குறும் விநயபா வனையெலாங்
காட்டுவான் வேதியன் கைபிடித் தேகினான்.
14
 
                   வேறு
 
  வண்ணவக் கடிமனை மருங்க ரங்கணைந்
தெண்ணருங் குணத்தபா வனையி யைந்தவோர்
புண்ணிய வுருக்கவின் பொலியத் தீட்டிய
கண்ணடிப் படிவத்தை யவற்குக் காட்டியே.
15
 
  இத்தகைப் படிவமற் றெம்மை யாளுடை
வித்தக நிருமல விபுத வேந்தனின்
சித்தமே சித்தமென் றுவக்குந் தேசிகன்.
உத்தம சாயலென்றுணர்ந்து கோடியால்.
16
 
  வான்முக நோக்கிய பயிரின் மன்னுநங்
கோன்முக வின்னருள் குறித்த தோற்றமாம்
ஊன்முக நயனங்க ளும்பர் நோக்குதல்
நூன்முக மதிவலாய் நுணித்துக் காண்டியால்.
17