|
பாவதா
ருவையறப் படுக்குங் கோடரி
ஜீவதா ருவிலெழு தெய்வ மாக்கனி
தேவதூ தரும்வியந் தேத்து செம்பொருள்
பூவுல குயவரு புனிதன் புத்துரை.
|
34 |
|
|
|
|
ஆன்மநோ
யகற்றுசஞ் சீவி யன்பர்க்குத்
தேனினு மினியதீஞ் சுவைய தெள்ளமிர்
தூன்மனத் திருள்கெட வொளிரு மொண்சுடர்
வானவர் கோமகன் மதுர வாய்மொழி.
|
35
|
|
|
|
|
பாவியென்
றுணர்ந்துபுண் பட்ட நெஞ்சர்க்குத்
தேவநீ தியின்வருந் திகிலை மாற்றிடுந்
தாவரு நித்யஜீ வனையுந் தந்திடுந்
தீவினை யறவரு செம்மல் வாசகம்.
|
36 |
|
|
|
|
துன்பெனுந்
தீச்சுடச் சுழன்று சோர்வுறும்
அன்பருக் கவ்வன லவிக்கு நித்யபே
ரின்பவா ரிதிவிசு வாசிக் கின்னுயிர்
நம்பெரு மானிவண் நவின்ற வாசகம்.
|
37 |
|
|
|
|
தீர்த்தனோ
டாதியிற் றிகழ்ந்து தெய்விக
வார்த்தையாய்ப் புவிக்கொளி மருவ மானிட
மூர்த்தியாய் விளங்கிய முனைவன் றந்தநூற்
சீர்த்தியை யாவரே தெரிக்கு நீர்மையார்.
|
38 |
|
|
|
|
மற்றிதை
மனக்கொளென் றுணர்த்தி் மாடொரு
சிற்றறை புகுந்தனன் றெரியக் காட்டினான்
புற்றுறை யரவெனப் புழுங்கு மாத்திரன்
செற்றமில் சாந்தனென் றிருவர் சீரினை.
|
39
|
|
|
|
|
சாந்தனென்
றுரைபெறு தகைமை யோன்முகஞ்
சேந்தொளிர் மரையெனத் திகழும் பான்மையும்
பூந்துணர் கரிந்தெனப் பொலிவி ழந்தகங்
காந்துமாத் திரன்முகங் கரிந்த பான்மையும்.
|
40 |
|
|
|
|
கண்ணுற
நோக்கினன் கருதி வேதியன்
உண்ணிகழ் வனமுக முரைக்கு மென்னினும்
எண்ணுறுங் கலைவலோ யிவர்கு ணாகுண
நிண்ணயம் புலப்பட நிகழ்த்து வாயென்றான்.
|
41 |