|
வளம்படு
கோனகர் மருவத் தீவினைக்
களம்படு முலகினைக் கடிந்து காவலன்
நளம்படு மலர்ப்பத நயந்த நண்பநின்
உளம்பட வுரைப்பலென் றுரைத்தன் மேயினான்.
|
42 |
|
|
|
|
இருவருஞ்
சோதர ரெனினு மீங்கிவர்
கருமமும் விநயமுங் கருத்தும் வேறதாம்
மருமலி வனசமும் வறிய வாம்பலும்
ஒருவழிப் பிறப்பினு மொக்கு மேகொலாம்.
|
43
|
|
|
|
|
அத்தனா
நின்றெமக் கருளு மாண்டவன்
சித்தமே யாகவென் றமையுஞ் செவ்விய
உத்தம னிவனவன் கனிட்ட னொள்ளிய
வித்தக வைதிகர்க் குவமை மேவியோன்.
|
44
|
|
|
|
|
இவ்வியற்
சுடுமுக னியல்பென் னென்றியேற்
செவ்விய ரொழுக்கினைச் சிதையக் கூறிமா
வெவ்வியற் றீவினை விளைக்கு மாத்திரன்
அவ்விய னரும்பொறைக் கசட னாமிவன்.
|
45 |
|
|
|
|
நித்தனா
ரருட்செயற் கமைந்து நின்றிடாப்
பித்தனெத் துணைப்பொருள் பெறினும் பாழிலே
உய்த்திடு பேதைவன் மிடிவந் தொன்றுமேல்
மத்துறு தயிரென மறுகுஞ் சிந்தையான்.
|
46 |
|
|
|
|
கல்வரைப்
புறங்கட னாடு கான்செலீஇ
ஒல்வகைப் பொறையொடு முஞற்றி யொள்ளிய
பல்வகைப் பொருள்குவித் தருத்தும் பண்புடைச்
செல்வரைக் கண்டுகண் டெரியுஞ் சிந்தையான்.
|
47 |
|
|
|
|
தாழ்வுகண்
டுவப்பதை யலது தம்மின
வாழ்வுகண் டுவக்கிலா தெரியும் வன்கணான்
பாழ்வயி றோம்புவா னலது பாதலத்
தாழ்வினைக் ககன்றுயு மாற்றை யோம்பிடான்.
|
48 |
|
|
|
|
கான்முதிர்
கடுவயின் றினிய கன்னலைக்
கூன்முது கிரவண முவர்க்குங் கொள்கைபோல்
நூன்முறை தெரிந்தவர் நுவலு நோன்மைசால்
ஆன்மபோ தகமிவற் கருவ ருப்பரோ.
|
49
|