பக்கம் எண் :

120

  மல்லாடு வன்கணய வஞ்சமுறு மாயப்
பொல்லாத பேயினைமு ருக்குபுபு றங்கண்
டெல்லாந லம்பெறவி ரக்ஷைதரு மெல்லாம்
வல்லான்ம காகிருபை யுள்ளுறம தித்தி.

66
   
  மாதாவி னின்றெமைவ ளர்க்குமதி யூட்டித்
தாதாவி னின்றுசம ரக்ஷணைச மைக்கும்
வேதாவு மாகியுயர் வீட்டுலக முய்க்கும்
நீதாதி பன்கிருபை நெஞ்சுறநி னைத்தி.
67
   
  நஞ்சீவி யத்தினிடை யெத்தனைகொ னாசம்
வெஞ்சீய மாமலகை யெத்தனைவி தத்தில்
துஞ்சீடு பாடுகடொ குத்தனது கைத்திட்
டஞ்சீரெ னாவுதவிற் றாண்டையரு ளன்றோ.
68
   
  தன்னிருத யத்தருட ரித்தியலு மாறும்
பின்னரது நன்றுநிலை பெற்றுவளர் சீரும்
என்னபரி சென்றொருவ னெண்ணியினி தாயில்
இன்னபரி சென்றளவி டற்கெளிய தன்றால்.
69
   
  இத்தகைய காட்டிசயையுன் னெண்ணிடையி ருத்திப்
பத்தபரி பாலனப ரஞ்சுடரை நாடி
முத்தியுல கத்துநெறி முன்னிடுக முற்றுஞ்
சித்தசல னத்தையொழி கென்றினிது செப்பும்.
70
   
  நன்றுடன டத்தியினு நல்லுணர்வு நல்குந்
துன்றுசில காட்சியுள தொக்கறிதி யென்னாச்
சென்றெழில்கு லாவுமொரு திவ்வியவி னோத
மன்றுசெறி மாளிகையின் மாடணுகி நின்றான்.
71
   
  பானிலவி னாற்றிகழ்ப ருப்பதமி தென்னத்
தூநிலவு வெண்சுதைகு யிற்றியொளி துன்னும்
வானிலவு மேனிலைய மாடமது கண்டான்
கோனிலவு நாடுகுடி கொள்ளுமன முள்ளான்.
72
   
  கண்டுமன முங்கணும்வி யப்பொடுக ளிப்புக்
கொண்டதுத னித்தனிகு றித்துவரு போழ்தில்
விண்டொடநி வந்தவதன் மேலரமி யத்தில்
வெண்டுகில்பு னைந்துலவு வித்தகரை நோக்கா.
73