| |
தலையி
லானந்த தைலமிட் டாட்டினர் தயங்கும்
உலைவி லாதபீ தாம்பர முடுத்தன ருவந்து
விலைவ ரம்பிலா வெண்ணிலை யங்கிமே லிட்டார்
தொலைவி லாநலந் துய்த்தினி திருந்தனன் றூயோன்.
|
98 |
| |
|
|
| |
ஈது
சம்பவம் யாவையும் வேதிய னெதிர்ந்து
காத லாயிரு கண்கணீர் மல்கிடக் கனிந்து
வேத நாயகன் கருணையை வியந்துளத் தேத்தி
ஓது சீர்த்தியாய் விடையுத வுட்புக வென்றான்.
|
99 |
| |
|
|
| |
காலங்
காட்டிய கதிர்களு முடுக்களுங் கவினி
ஞாலங் காட்டிய பூதபௌ திகங்களு நம்பன்
மூலங் காட்டிய வியல்விதி முறைதவ றாது
சீலங் காட்டிய சீர்மையைக் கண்டனை செய்யோய்,
|
100 |
| |
|
|
| |
இயன்மு
றைக்கமைந் தொழுகல்போ லெம்மையீ டேற்றுஞ்
செயன்மு றைக்கமைந் தொழுகலு நங்கடன் றீய
மயன்மு றைப்படு மனஞ்செலு நெறிப்படன் மதியன்
றுயன்மு றைக்கிறை சித்தமே நலனென வோர்தி.
|
101
|
| |
|
|
| |
தமர
நீருல கத்தவ தரித்தசற் குருமுன்
உமது சித்தமே சித்தமென் றுவப்புடன் பணியும்
அமர நாட்டையொத் தகனில மனைகவென் றளித்த
விமல மந்திரம் ஜெபித்துமென் வேறொன்று விழைதல்.
|
102 |
| |
|
|
| |
பித்த
ளைந்தவிப் பாத்திரம் பிரித்துநீ ரெடுக்கச்
சித்த மெலஃ தாகவென் சித்தமன் றென்னா
வித்த கத்திரு மைந்தனாத் துமத்துயர் மேவிக்
கெத்து சேமில்வாய் விண்டமை கேட்டிலை கொல்லோ.
|
103
|
| |
|
|
| |
நல்குங்
கேடென நன்மையை யொருவுவ நாசம்
பல்குந் தீமையை நன்மையாப் பற்றுவம் மதியற்
றல்கு சிந்தையே மாதலி னளவிலா ஞானம்
மல்கு தந்தையார் நமக்கறிந் தூட்டலே மரபாம்.
|
104 |
| |
|
|
| |
சுருதி
நாயகன் றிருவுளங் கூட்டுநாட் டோழ
கருதி யாங்குவீ டடைதலே கடனெனக் கழறி
வருதி நீயெனச் சென்றிருண் மலிந்தவோ ரரங்கைக்
குருதி வாகர தாஸற்குக் காட்டினன் கூறும்.
|
105
|