பக்கம் எண் :

131

  ஆதி மூலப் பரம்பொருளி னருமைச் சுதனாங் கிறிஸ்தியேசு
மாதின் வித்தா யவதரித்த வடிவத் திருமே னியிற்றோன்றி
ஜோதி முகமண் டலச்சேவை தரிசித் தெவருந் தொழுதிறைஞ்ச
நீதி யாதி பதியாகி நியாயா சனத்து வீற்றிருந்தார்.


154
   
                 வேறு
   
  ஆண்டி ருந்தவ ரசிளங் கோமுகம்
மூண்ட கோடைமு திர்கடு நண்பகல்
சேண்ட யங்கிய செஞ்சுடர் போன்மெனக்
காண்டல் செய்தனெ னுள்ளுறக் கன்றியே.
155
   
  ஆதி யம்பரம் ஜோதிப டுக்கவும்
பூதி யங்களெ ரிந்துபு கைந்தன
மீதி யங்கிய மீன்கணம் வீழ்ந்தன
மாதி ரங்கள்கு லைந்தம றுகியே.
156
   
  பொரிவ தீவபு கைவபு ழுங்குவ
எரிவ காந்துவ வேங்குவ தேங்குவ
இரிவ சோருவ தேகுவ னீளுவ
திரிவ நிற்பதி கைப்பச ராசரம்.
157
   
  இருள டைந்துவி ருசுட ரெங்கணும்
மருள டைந்துக லங்கின மாமறை
தெருள டைந்தவ ருந்திகைத் தாருளம்
உருள டைந்தில தாலிவ்வு லகமும்.
158
   
  வைய கத்தும டிந்தனிர் யாவரும்
நொய்தெ ழுந்துநு வல்நடுத் தீர்வையை
எய்து மின்னென்றி யாருந்து ணுக்குற
வெய்தொர் சத்தம்பி றந்தது விண்ணிடை.
159
   
  திருக்கு விஞ்சிய சிந்தையி னேன்செவிக்
குருக்கி வார்த்தசெம் பாயதவ் வோசைநொந்
திருக்கும் புண்ணிலெ ரிநுழைந் தாலென
முருக்கி நின்றதென் னுள்ளத்தை முற்றுமே.
160
   
  ஆங்கெ ழுந்தவவ் வோசையங் கங்குறத்
தாங்கி நிற்குந்த ருக்கில வாதலின்
ஓங்கு மால்வரை யுட்கியவ் வொல்லையில்
வீங்கு மெய்பிளந் தொக்கவெ டித்தவே.
161