பக்கம் எண் :

137

  தீக்க வல்லவெந் தீவினை
போக்க வல்லதும் புண்ணியம்
ஆக்க வல்லது மறுதிநாட்
காக்க வல்லதுங் கருணையே.   
202  
 
  என்னு ளத்தியல் பீதெனாப்
பன்னி னான்பர மார்த்திகன்
அன்ன தோர்ந்தரு ளாளனும்
பின்னர் மற்றிது பேசுவான்.
203
 
  கடையு கத்தெழு காட்சிகண்
டுடையு நெஞ்சனு றுந்துயர்
அடைய நன்கறிந் தாய்வழிக்
கிடைம றந்திட லெம்நீ.
204
 
  காட்சி தொக்கவிக் கடிமனை
மாட்சி கண்டும னத்துள்வைத்
தாட்சி செய்பவ ரருள்வழி
நீட்சி யென்றுநி னைத்திடார்.
205
 
  அனைய தாதலி னன்பவிம்
மனையின் மாட்சிம தித்துநன்
னினைவி னேருநெ றிச்செலீஇ
முனைவ னாடடை மொய்ம்பினோய்.
206
 
  பத்த பாலன ராம்பரி
சுத்த ஆவியின் றுணையுனக்
கெத்தி றத்தினு மியையுமாற்
சித்த சஞ்சலந் தீர்திநீ.
207
            
  ஈச நேசமி யைந்தமெய்த்
தேசி கன்னிவை செப்பியே
ஆசி கூறிய னுப்பினான்
மாசி லானும்வ ழுத்துவான்.
208
 
                 வேறு
 
  அகத்திரு ளிரிந்தோட வருண்மொழச் சுடரேற்றி
மகத்துவ நெறிகாட்டும் வலவவிம் மனைமுனறில்
இகத்தையு மினிதாகப் பரத்தையு மெதிர்காட்டி
மிகத்தெருட் டினையைய விள்ளுவ தறியேனே.
209