|
தேவாரம், திருநாமப்பதிகம்.
(பண், காந்தாரம்.) |
|
|
1. |
மன்னுயிர்த்
தொகுதியீ டேற வானினும்
இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை
பன்னியேத் தெடுப்பது பாவ ஜீவருக்
கின்னமு தாயதி யேசு நாமமே. |
|
|
2. |
தெருளெலாந்
தனதெனுந் தெய்வ மாமறைப்
பொருளெலாந் தனதெனப் பொலிந்தி லங்குவ
தருளெலா மன்பெலா மறனெ லாம்வளர்த்
திருளெலாந் தொலைப்பதி யேசு நாமமே. |
|
|
3. |
பன்னருங்
குணத்ததும் பவித்தி ரத்ததுந்
துன்னரும் பொருளதுந் தூய்மை பூண்டுளோர்
நன்னர்நெஞ் சத்திடை நடித்து நிற்பதும்
என்னுயிர்த் துணையதும் யேசு நாமமே. |
|
|
4. |
நித்திய
ஜீவனு நெறியும் போதமுஞ்
சத்திய நிலையமுந் தானென் றுள்ளது
பத்தியிற் பரவுவோர் பரம வீடுற
இத்தலத் திறுத்ததி யேசு நாமமே. |