பக்கம் எண் :

142

  ஆவலொடு மருள்வேத வறநெறியைக் கடைப்பிடித்து
ஜீவலயம் வருமெனினுந் திருவடிப்பற் றொழியாமே
பூவலயத் திடையுனக்காய்ப் பொன்றுமொரு சான்றாகக்
காவலநீ யடியேனைக் கடைக்கணிக்கக் கடவாயோ.

20
   
                         வேறு
   
  இன்னன துதிபகர்ந் திறைஞ்சு மெல்வையிற்
பொன்னிலத் தவரொரு புனிதர் மூவர்போந்
தன்னவன் விழிப்படீஇ யஞ்சல் நின்வயின்
மன்னுக நஞ்சமா தானமாண் பென்றார்.          
21
   
  மூவரி லொருவரா முதல்வன் முந்தியுன்
ஜீவனுக் கழிவுசெய் தீய வெவ்வினை
யாவையுந் தொலைத்தன மிடர்ப்ப டேலெனாத்
தாவருங் கருணையிற் சாற்றி னாரரோ.          
22
   
  உந்துபே ரன்பினா லுருகி யாங்கவன்
கந்தையைக் களைந்தொரு கவின்கொளு                            வெள்ளுடை
விந்தையாய்ப் புனைந்தனர் விசித்த வெங்கொடும்
பந்தமிற் றுசநடு நின்ற பண்ணவன்.
23
   
  மற்றொரு தூயவர் மகிழ்ந்து வேதியன்
நெற்றியி லொருகுறி நிலவக் கோட்டிவிண்
பற்றுசெந் நெறிதிகழ் பயணப் பத்திரந்
தெற்றென வருளிமற் றீது செப்புவார்.          
24
   
  செந்நெறி யிதுவெனத் தெரிக்கு மாதலின்
உன்னெறிக் குறுதுணை யாமி தோர்ந்துநீ
நன்னெறிப் படின்வரு நவையின் றாம்விரைந்
திந்நெறி கடைப்பிடித் தேகற் பாலையால்.          
25
   
  புண்ணிய நகரைநீ பொருந்து போதவன்
நண்ணிய வாயிலோர்க் கிதனை நல்கிடின்
உண்ணில விடவுனை யுய்ப்ப ராமெனத்
திண்ணிதி னுணர்த்திநீ சேறி யென்றனர்.          
26
           
  இவ்வகை மூவரு மெதிர்ந்து தொண்டனுக்
குய்வகை யுவந்தருள் புரிந்தவ் வொல்லையிற்
செவ்விதின் மறைந்தனர் சிந்தை யுள்ளுளே
நைவரு மடியரை நாடு நம்பிரான்.
27