|
கரந்தமை
வேதியன் கருதிக் கண்கணீர்
சொரிந்திரு கரந்தலை சூடித் தோத்திரித்
தரந்தைநீத் தகங்களித் தடிய னேனையும்
புரந்தமை யேயருட் புதுமை யென்றனன்.
|
28 |
|
|
|
|
வெரிநுறு
சும்மையை விழுத்தி வெண்டுகில்
பரிவொடு நல்கியோர் பயணப் பத்திரந்
தெரிவுற வருளிய சீர்மை யாவையும்
பிரிவற வுள்ளினன் மறப்பில் பெற்றியான்.
|
29 |
|
|
|
|
இத்தகு
சிலுவையை யெய்து முன்னர்யான்
சித்தசஞ் சலச்சுமை சுமந்து தேம்பிய
அத்தனை துயரமு மகன்ற தேயஃ
தெத்தனை பெரியபாக் கியமென் றேத்தினான்.
|
30 |
|
|
|
|
புல்லிய
லுலகமீ யாத பொற்புறு
நல்லியன் மெய்ச்சமா தான நண்ணுமா
றல்லியன் மனத்தெளி வருளிக் காத்தவவ்
வெல்லையில் கருணையை யிதயத் துள்ளினான்.
|
31 |
|
|
|
|
காண்டகு
மிரும்பினைக் கவரூங் காந்தமொத்
தாண்டகை திருவரு ளகத்தை யீர்த்திட
மாண்டகு சாதனம் வகுத்துக் காட்டிய
சேண்டரு நெறிக்கொடு திருமி னானரோ.
|
32 |
|
|
|
|
சுமைநீங்கு
படலம் முற்றிற்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
விள்ளருந்
தீவினை விளைத்த வெந்துயர்
தள்ளுறப் படுதலிற் றளர்ச்சி யின்றியே
உள்ளுறு முவகைமுன் னுந்த வுந்தலாற்
கள்ளமி லுணர்ச்சியான் கடிது போயினான். |
1 |
|
|
|
|
அருத்தியிற்
பற்பல்யோ சனைய கன்றுபோய்க்
கருத்தில்புன் மாக்களாற் கடப்ப தற்கொணா
வருத்தமென் றொருதட மலையை வானுறத்
திருத்தகு வேதியன் றெரியக் கண்டனன்.
|
2 |