பக்கம் எண் :

145

  நின்றுசு கிக்கு மாத்தும வாழ்வை நினைகில்லீர்
பொன்றுட லிங்கோர் புற்புத மென்னும் பொருளுன்னீர்
தின்றுகொ ழுத்துத் தீச்சிறை வேட்டுத் திரிகின்றீர்
நன்றிது வாமோ பேதைய ரோநீர் நமரங்கள்.

11
   
  வெம்புமி ருத்தா மாழிகி ளம்பி விடுமாயுள்
அம்பிய லைக்கச் செய்வன செய்யா தலைகூம்பின்
கொம்பிலு றங்குங் கொள்கைய ரானீர் குணநாடில்
நம்பனை நம்பிக் கும்பிடுங் கூவி நமரங்கள்.
12
   
  தீமலி கும்பி யூடுபு குத்தித் தெறுதீமை
ஆமவை யாவுஞ் சேரவெ றுத்திட் டருளாளன்
கோமக னேசு சாமிகி றிஸ்து குமரேசன்
நாமம்வ ழுத்தி நல்வழி கூடும் நமரங்கள்.
13
   
  மேக்குயர் வாழ்வு மீடணை யாவும் விடுபட்டிங்
காக்கைத ளர்ந்தே சாக்கிடை யாகி யலமந்து
மீக்கிளர் மூச்சும் விக்குளு மேவி விழிகுன்றி
நாக்குழ றாமுன் னம்பனை வாழ்த்தும் நமரங்கள்.
14
   
  கலங்கலிர் வஞ்சப் பேயிடு வித்த கடுமாய
விலங்கைய றுக்கத் தக்கதி தென்கை மிளிர்கட்கம்
இலங்கருள் வேந்த னாணைத லைக்கொண் டெழுந்துள்ளம்
மலங்கலி ராகிச் சேசுவை நம்பி வழிக்கொண்மின்.
15
   
  காலம்வி ரைந்து தூமநி கர்ப்பக் கடி தோடுஞ்
சீலம றிந்து சிந்தைதி ரும்பித் திருவுள்ளஞ்
சாலம தித்து மெய்வழி கூடிற் றகைசான்ற
மேலுல கத்தைச் சேருவி ரென்றும் விளிவின்றால்.
16
   
  உலகைம யக்கிக் கலகம்வி ளைத்திட் டுயிர்மாய்க்கும்
அலகை கருச்சித் தடருநெ ருக்குற் றரியேறு
சுலவுல தைப்போன் றிதையுணர் வற்றுத் துயில்கின்றீர்
விலகியு யற்குத் தருணம்வி ழித்து விரைமின்னோ.
17
   
  இத்தனை யான வித்தக போத மெடுத்தோதிப்
பத்தன்வி ளிக்க நித்திரை பங்கப் படுமாறு
கத்துவ தென்னீ சொற்றவை முற்றுங் கனவென்னாப்
பித்துறு பேதை விண்டுது யின்றான் பிணமாக.
18