பக்கம் எண் :

152

  பேசரும் வருத்தந் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம்
ஈசனார் செயலெல் லாமென் னீடேற்றத் திசையு மென்னா
நேசமோ டமைய வேண்டு நிலைபிச கிடுவ ராயின்
நாசமோ சம்பொல் லாங்கு நரகும்வாய் திறக்கு மன்றே.

40
   
  இடையில்வந் திடையிற் போன விருவர்தங் கதியீ தாக
உடையவன் றிருவாக் கொன்றே யுறுதுணை யாகக் கொண்டு
நடைவழி பிடித்துச் சென்ற நலங்கிளர் மறைவ லாளன்
மிடைதரு வருத்த மென்னும் வியன்கிரி யருகர் வந்தான்.
41
   
                        அமார்க்கப் படலம் முற்றிற்று.
   
 
ஜீவபுஷ்கரிணிப் படலம்
 
   
  அங்க ணோர்சிறை மீக்கிளர்ந் துயர்விசும் பணவி
மங்கு றோய்ந்தெழின் மறிதரத் தண்ணிழன் மருவிக்
கொங்கு யிர்த்துவான் மீனெனப் பன்மலர் குழுமும்
பொங்க ரொன்றுள தரதுலர் புகலிடம் போலும்.
1
   
  வேங்கை சந்தனங் காரகில் தேக்கொடு மிடைந்த
கோங்கு சண்பக மாப்பலா வத்திகுங் குலிகம்
ஓங்கு மேழிலைம் பாலைகுங் குமம்புல வோமை
பூங்கு ருந்தசோ கந்தம ரத்தைபூங் கடம்பு.
2
   
  வன்னி பாதிரி யிலவங்கம் வன்மரை வகுளம்
புன்னை வாதுமை யிருப்பைவான் றொடுமடற் பூகம்
தென்னை யாமல கங்கடுத் தான்றிதிந் திருணி
பொன்னி ணர்ப்படு கொன்றையச் சுவத்தமால் புன்கு.
3
   
  புலந்தொ குத்தபல் ஜாதிய விருக்கங்கள் பொதுளி
நலந்தொ குத்தபன் மலர்க்குவை நாற்றிசை கமழ
நிலந்தொ குத்தமன் பதைக்கெலா மகமகிழ் நிலவப்
பலந்தொ குத்துத விடுவதோர் பைம்பொழிற் பழுவம்.
4
   
  பொங்கு ஜீவபுஷ் கரிணியின் புதுப்புனல் தேக்கி
அங்கு ரித்தபுற் பூண்டுதண் டலைக்குல மனைத்துங்
கொங்கு லாய்வரும் வசந்தமென் கரல்படுங் கோட்பால்
பங்க மில்பசும் பொன்மய மாயதப் பழுவம்.
5