|
அண்ணல்
வானகத் தரசனிவ் வகலிடம் புரக்குந்
தண்ண ளிக்குடை கவிந்தன வாமெனத் தயங்கிக்
கண்ண கன்றவெப் பாங்கருங் கவினுறக் கவிந்து
நண்ணு வார்க்குறு வெப்பநோய் தணிக்குமந் நறுங்கா.
|
6 |
|
|
|
|
முந்து
முத்தலைச் சிகரியின் முளைத்துமூ துலகின்
பந்த நூறிடு ஜீவமா நதிமுகம் படிந்து
விந்தை யாய்நர ஜீவர்க்கு விழுமநோய் துடைக்கும்
மந்த மாருத மலிந்ததம் மதுமலர்ச் சோலை.
|
7 |
|
|
|
|
அலர்ந்த
செவ்வியி லகத்தெழு மளியமென் குரலிற்
புலர்ந்த டைந்தவர் விடாய்தணித் துள்ளவெப் பொருளும்
உலர்ந்த வான்பயிர்க் குதவுமோர் மழையென வுதவி
மலர்ந்த செய்கையில் வள்ளலைப் பொருவுமாண் பொதும்பர்.
|
8
|
|
|
|
|
மண்ட
லத்துற முடங்குதா ளூன்றிவாய் மலர்ந்து
விண்டு தூமலர்க் கட்டுளி வடித்துமெய் யரும்பித்
தண்ட ளிர்க்கரம் விரித்துயர் சினைத்தனை தாழ்த்திக்
கொண்ட செவ்வியிற் பரவுதொண் டரைப்பொரூஉங்
கொழுங்கா.
|
9 |
|
|
|
|
புண்ணி
யன்றிரு வடிமலர்க் கன்புசெய் புனிதர்
உண்ணி கழ்ந்தமெய்ப் பத்தியி னொள்ளிய செயல்போல்
வண்ண வான்றருக் குலமலர் நறுமண மலிந்து
கண்ண கன்புவி முழுவது நறுங்கடி கமழும்.
|
10 |
|
|
|
|
பொன்னி
லத்தர சன்றிரு வோலக்கப் பொதுவின்
மன்னு பல்லியங் கலித்தெனச் சினைதொறும் வதிந்த
பன்னி றத்தபுள் ளினஞ்சிலம் பியவொலி பம்பித்
துன்னு வோருளங் களிப்புறச் செவிக்கின்பந் தொகுக்கும்.
|
11 |
|
|
|
|
வனம
டங்கலும் போதகம் வரியளி மருவும்
வனம டங்கலும் போதகக் குருளையு மயக்குங்
கனம டங்கலும் போதக வுங்களி மயில்கள்
கனம டங்கலும் போதகந் தரும்பல காட்சி.
|
12 |
|
|
|
|
அமரர்
யாவருங் கைபுனைந் தியற்றிய வாதி
குமர நாயகன் றிருமணப் பந்தலோ குறிக்கிற்
றமர நீருல கத்துவாழ் சபையெம்பி ராட்டி
விமல லீலையுய் யானமோ யாதென விரிப்பாம்.
|
13 |