|
|
|
|
|
|
|
கஞ்சமலர்ப்
பாதமிரு கண்கலுழி யாற்கழுவிச்
செஞ்சொன்மலர்ப் பாமாலைத் தேந்தொடைய லைச்சேர்த்தி
அஞ்சலித்துப் போற்றியருள் வேண்டிநின்றங் காவலுடன்
நெஞ்சாரப் புல்லிவழி கூடினா னேர்கருதி.
|
1
|
|
|
|
|
காரார்பூங்
காவகத்தின் கண்ணார்நி ழற்சுகமுஞ்
சீரார்ந றுஞ்சுனையின் றேம்படுதெண் ணீர்ப்பயனும்
ஏராருந் தூயவி ளங்காலின் றேற்றரவும்
நேராயு ளத்திற்பொ றித்துநெறி கூடினான்.
|
2 |
|
|
|
|
செல்வான்வ
ழிமறித்துச் சீறிவிட முள்ளெயிற்றுக்
கொல்வாள ரவங்கு றுக்கெதிர்ந்த் கொள்கைகோல்
தொல்வாரி திப்புவியி றொக்கபெருந் துன்பமெலாம்
மல்வாய்த்து நின்றம லையடிவா ரத்தணைந்தான்.
|
3
|
|
|
|
|
அவ்வசலந்
தன்னைய றியாதார் யாருமிலை
கௌவைநீர் வேலிபு டைவளைந்த காசினியில்
ஒவ்வொருவ ருள்ளத்து யர்வேயு யர்வன்றிச்
செவ்வேமட் டிட்டளவு செப்பரிது நேருங்கால்.
|
4
|
|
|
|
|
தொன்மையல
கிற்பாவந் தோன்றியநாட் டோன்றியெங்குந்
தின்மைபெரு கப்பெருக வோங்கிச்செ ருக்கடைந்து
வன்மைமிகு துன்பம்ம னக்கவலை துக்கமெனுந்
தன்மைத்த னிச்சிகர மூன்றுத டித்தனவால்.
|
5
|
|
|
|
|
கல்லாயி
ளக்கமின்றித் தீயவினைக் காடுசெறிந்
தெல்லோன்சு டர்விளக்க மின்றாகி யெப்புறமும்
அல்லாயி ருள்குழுமித் துர்க்குணமுட் பூண்டளவிப்
பொல்லாத வல்லிதயம் போன்றுளதப் பூதரமே.
|
6
|
|
|
|
|
வட்டமிடுங்
கிட்டிவரும் வந்துவந் தச்சுறுத்துங்
கட்டம்வி ளைக்குங்க டுகடுக்குங் கௌவியுயிர்
நட்டஞ்செ யும்பொல்லார் நல்லாரென் றோராத
துட்டவி லங்கனந்தந் தொக்கதந்த்ச் சூழலே.
|
7 |