பக்கம் எண் :

161

 

பொன்னகர் புகுமார்க்கம் பூதர நடுவாக
மின்னொளி யெனநேரின் மிளர்வது மிதிகொம்பும்
உன்னவோர் பிடிகொம்பு முளதென வறிகில்லேன்
என்னினிப் புரிகிற்பேன் யாதுமோர் துணையில்லேன்.

16
     
 

பின்னிடை குவனாயி னுறழ்வது பெருமோசம்
நன்னெறி பிசகாமே நனிகடைப் பிடித்தேறி
முன்னிடு குவனாயின் முறையிறை பிறழாத
மன்னவ னொருகைதந் துதவவும் வருவாரால்.      

17
     
 

முன்னரி முழையொன்றோ வெரிகனன் முதிர்சூளை
துன்னின ரடியர்க்காய்த் துணைபுரி தருதெய்வ
மன்னவ னஃதோரில் வளரிடர் மலையேறிப்
பொன்னில வுலகூடு புகவருள் புரியார்கொல்.       

18
     
 

அடர்கடு வனதீமை யளவள வியபூத
உடலிது விழுகாறு மிடையிடை யுறுதுன்பம்
இடர்பல வுழவாமே யியல்வது முறையன்றாற்
சுடருல குறினன்றோ வருவது சுகநித்யம்.         

19
     
 

எட்டிமல் கிடுகாடோ வின்சுவைக் கனியீயுந்
துட்டவெஞ் சிறைவீட்டிற் சோடச வுபசாரங்
கிட்டில வெனலாமோ கேடுறு முலகத்தே
மட்டறு சுகபோகம் விழைவது மடமைத்தால்.      

20
     
 

அடியவ ருணர்வுள்ளா ரசடில ரவர்மேலே
படிவன பலதுன்ப மெனினுறு பயன்றேரின்
முடிவினி னலமேயா முறைமுறை யனன்மூழ்கப்
படினொளி நனிமல்கிப் பசுமையுற் றிடுபொன்போல்.

21
     
 

ஆதலி னிடையாமே யணதிகழ் பரலோக
நாதன தருளொன்றே நற்றுணை யெனக்கொண்டு
போதரு குவனென்னாப் பொறியொரு புலனாகப்
பூதர மிசையேறிப் போயினன் வழிகூடி.          

22
     
 

ஓடுவ னடைகூடி விரைகுவ னொருகிதம்
பாடுவன் மேனோக்கிப் பார்த்துளம் பதைத்தேங்கி
வாடுவ னிளைப்பாகி மலங்குவ னினவாகக்
கோடுயர் நெறிசேர்செங் குத்தடி குறுகுற்றான்.    

23