|
கண்டன
னினியேற்றங் கடினமிந் நிமிர்குன்றில்
உண்டென மலைந்துள்ள முயங்கிநெட் டுயிர்த்தந்தோ
கொண்டனன் றிகிலேனுங் குறுகுறு நின்றொல்லை
அண்டர்தம் பெருமானை யுள்ளின னவலித்தே.
|
24 |
|
|
|
|
விளக்குற
விருளோடும் விதமென வருடுன்னி
உளக்கவ லையைநீக்கி யுரங்கொடு காலூன்றத்
துளக்கறு திடநல்கத் துணிவுவந் தருணாதன்
வளக்கரு ணையைவாழ்த்தி யேறினன் மலைமுன்றில்
|
25
|
|
|
|
|
தைவிக
கிருபாஸ்தந் தனைமுன மீர்த்தேக
ஐயமில் விசுவாச மன்வுபின் னணைந்துந்த
மையறு திருவாக்காம் வச்சிர தண்டூன்றி
மெய்யுறு பலத்தாலவ் விலங்கலின் மிசைபோனான்.
|
26
|
|
|
|
|
பொறியயல்
விலகாமற் புலனெதும் விழையாமல்
குறியது தவறாமற் குணநிலை வழுவாமற்
பிறிதெது நினையாமற் பிறங்கலின் மிசைசெல்லும்
நெறியது பிசகாமற் சென்றன நெடுந்தூரம்.
|
27
|
|
|
|
|
அடிக்கடி
முழந்தாணின் றடருவ னருள்பற்றிப்
பிடிக்குவ னுரத்துன்னிப் பெயர்குவ னினவாகப்
படிக்கிர க்ஷணைநல்கும் பரனியற் றியசெந்தேன்
வடிக்குமொண் மலர்நந்த வனத்தினி லினிதுற்றான்.
|
28 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
கோனகர்
புகவருங் கொள்கைத் தாயவெம்
மானவ ரையும்வழி வருத்த மாற்றிடும்
பான்மையிற் றாயகம் புரையும் பண்புள
தூனமில் காட்சிய துவகை பூப்பது.
|
29
|
|
|
|
|
சஞ்சல
முடித்தலை தயங்கு மாதலில்
விஞ்சிய சுகத்தினை விளக்கு மாலது
வஞ்சமின் மலர்முகங் காட்டி வாய்த்ததேன்
செஞ்செவே தருமன்பர் செவ்வி போன்றது.
|
30
|
|
|
|
|
மன்னுநந்
தனவனத் தெழின்ம ரக்கிளை
பின்னியும் வல்லிகள் பிணைத்தும் பெட்புற
நன்னறுந் தழைக்கொடி படர்த்தி நாட்டிய
பன்னக சாலையொன் றுளதப் பாங்கரில்.
|
31
|