|
துற்றிய
துயிலுணர்ந் தெழுந்து சோம்பறுஞ்
சிற்றெறும் பாதியின் சீல மோர்ந்துநீ
கற்றுணர் வடைகடைத் தேறு வாயெனா
உற்றபே ராசையோ டுரத்து கூவினான்.
|
40 |
|
|
|
|
மீக்கிளர்
துடிப்பொடு விளித்த வாசகக்
கூக்குரல் செவித்துளை குறுகி யொல்லெனத்
தாக்கலும் வேதியன் றனுந டுக்குறத்
தூக்கம்விட் டெழுந்தனன் றுணுக்குற் றோடினான்.
|
41 |
|
|
|
|
பொழுதுபட்
டிடும்வரை துயின்ற புன்மையை
அழுதழு துளநினைந் தழுங்கி யேங்கினான்
பழுதறத் துணைபுரி பரம சாஸனம்
முழுதுணர் பேதிய னவல மூடியே.
|
42 |
|
|
|
|
பார்த்தில
னயற்புறம் பரப ரப்புடன்
கூர்த்தசெந் நெறிக்கொடு குன்றத் துச்சியை
வேர்த்துடல் விதிர்ப்புற விரைந்த டுத்தனன்
சீர்த்தபு மாலையுஞ் செறிந்த தென்பவே.
|
43 |
|
|
|
|
அதுபொழு
தச்சனு மறச்சந் தேகியும்
எதிர்முக மாய்விரைந் தோடி யேங்கிமெய்
விதிர்விதிர்த் தலறியுள் வெருண்டு மீயுறக்
கதுமென வருவதைக் கண்ணுற் றானரோ.
|
44 |
|
|
|
|
அங்கவ ரருகுற
வணைந்து தோழன்மீர்
வெங்கொடும் பயங்கரம் விளைந்த மூலமென்
எங்குசெல் கின்றனீ ரெதுகு றித்துளீர்
சங்கட மெவன்கொலோ சாற்று வீரென்றான்.
|
45 |
|
|
|
|
ஆரியன்
வினவல்கேட் டச்ச னென்னுமப்
பூரிய னையகேள் புனித யாத்திரை
வீரியந் தருமென விரும்பி வந்திவண்
காரியம் பிறிதெனக் கண்டு கொண்டனம்.
|
46
|
|
|
|
|
நாசதே சத்துளேம்
நாங்கள் நல்வழி
ஈசனார் பதியினி தீட்டு மென்றிதில்
ஊசலா டுளத்தொடு முலவி வந்தனம்
மோசமித் துணையென முன்னு ணர்ந்திலேம்.
|
47 |