|
வேறு
|
|
|
|
|
|
வெறுத்த
நாசப்ப டப்பைவி ரும்பியான்
மறுத்த நாடின்ம கேசன்சி னத்தழல்
இறுத்தொ ருங்கற யாவையும் வாய்மடுத்
தொறுத்த காலைமற் றுய்குவ தெங்ஙனம்.
|
56
|
|
|
|
|
மொழியும்
பல்வகை மோசங்கண் முன்னுள
வழியி லேனுநம் மன்னருள் வாய்க்குமேல்
ஒழியு மங்கவை யாண்டுறி னுன்னத
அழிவில் பேரின்ப ஜீவன டுக்குமால்.
|
57
|
|
|
|
|
திருமித்
தீக்கிரை யாவதிற் சீரிய
தருமப் பாதைபி டிப்பது தானலம்
வருமப் பாலவ ருவவ ரட்டுமென்
றொருமைப் பாட்டுடன் சென்றிவை யுள்ளுவான்.
|
58
|
|
|
|
|
அலக்க
ணுக்கொர ருமருந் தாகியுட்
கலக்க நீக்குங்க ருணைப்பி ரான்றரும்
இலக்க ணத்திரு வாக்கினெ ழிற்சுருள்
புலக்க ணைத்தெளி விக்கும்பு துமைத்தால்.
|
59 |
|
|
|
|
என்ன
வுன்னியி லங்கருட் சாஸனந்
தன்னை நாடினன் றன்வயிற் காண்கிலன்
பன்ன ருந்திகி லோடும்ப தைபதைத்
தென்னு யிர்க்குயி ரையிழந் தேனெனா.
|
60 |
|
|
|
|
எண்ணி
யெண்ணியி ரங்குமி டர்ப்படுந்
துண்ணென் றேங்குந்து டிக்குமெய் சோர்வுறும்
புண்ணி யப்பொரு ளின்பொலி வையினுங்
கண்ணிற் கண்டுக ளிப்பன்கொ லோவெனும்.
|
61
|
|
|
|
|
பாதை
காட்டிந டத்தும்ப வித்திர
சாத னத்தைத்த வறவிட் டேனெனாக்
காத லோடுபி ணங்குங்க ரைந்தழும்
ஏதெ னக்கினி ரக்ஷையென் றேங்கிடும்.
|
62 |
|
|
|
|
சிந்தை
மாழ்குமோர் ஜென்மத ரித்திரன்
விந்தை யாகப்ப டைத்தவி ழுநிதி
புந்தி யின்மையிற் போக்கியு லைந்தென
நொந்திவ் வாறுநு ணங்கிய காலையில்.
|
63 |