|
துட்ட
மும்மலச் சேட்டைது தைந்தமெய்
ஒட்டி நிற்பினு முள்ளுவர்த் தொட்டிலார்
சிட்டர் வாவிச்செ ழுங்கம லத்திலைப்
பட்ட லங்குதெண் ணீரது பான்மைபோல்.
|
72
|
|
|
|
|
ஆன்ம
வூதிய நாடில னாகியிவ்
வூன்ம லிந்தவு டற்சுக நச்சிய
பான்மை யெத்தனை பாழ்படு புன்மதி
கோன்மு றைக்கித ணுத்துணை கொள்ளுமோ.
|
73 |
|
|
|
|
நாட்டைச்
சேருந சையுள ரேனுமுன்
கூட்டைப் பேணிஸ ரேலின்கு ழாமுனங்
காட்டைச் சுற்றித்தி ரிந்துக ழிந்தவப்
பாட்டைப் போன்றுள தென்னுறு பாடரோ.
|
74 |
|
|
|
|
இம்மட்
டாகமுன் னேறிச்செல் வேனெனில்
எம்மட் டோசென்றி ருப்பனங் கெட்பக
வம்மட் டோருணர் வற்றயர் வெய்தலால்
மும்மட் டிவ்வழிச் செல்துயர் மூண்டதால்.
|
75
|
|
|
|
|
என்று
ளக்கசப் போடழு தேங்கியும்
நன்ற தர்க்கிரு பாங்கரு நாடியும்
மன்ற லார்ந்தம துமலர்க் காவணஞ்
சென்றி றுத்தவண் டேடினன் செவ்வியோன்.
|
76
|
|
|
|
|
கள்ளி
ணர்ப்படு தாதுகு காவணத்
துள்ளு றப்புகுந் தொண்ணிதி வைப்பினைத்
தெள்ளி திற்றுரு வித்துயில் செய்தவப்
பள்ளி யுற்றதன் கீழுறப் பார்க்கையில்.
|
77 |
|
|
|
|
தன்னு
யிர்க்குயி ராயசம் பத்தினை
மன்னு யிர்க்குயி ராகும ருந்தினை
என்னு யிர்க்குமி னியசஞ் சீவியைப்
பொன்னு யிர்க்கும்பொ லன்சுரங் கத்தினை.
|
78 |
|
|
|
|
விதிவி
லக்கின்வி ளக்கைவி சும்புதோய்
மதியை மண்ணுல குக்கென வைத்தமா
நிதியைக் காட்டிநி லவஞ்ச னத்தினைக்
கதியைக் காட்டுமோர் கைவழி காட்டியை.
|
79
|