பக்கம் எண் :

168

 

துட்ட மும்மலச் சேட்டைது தைந்தமெய்
ஒட்டி நிற்பினு முள்ளுவர்த் தொட்டிலார்
சிட்டர் வாவிச்செ ழுங்கம லத்திலைப்
பட்ட லங்குதெண் ணீரது பான்மைபோல்.    

72
     
 

ஆன்ம வூதிய நாடில னாகியிவ்
வூன்ம லிந்தவு டற்சுக நச்சிய
பான்மை யெத்தனை பாழ்படு புன்மதி
கோன்மு றைக்கித ணுத்துணை கொள்ளுமோ.

73
     
 

நாட்டைச் சேருந சையுள ரேனுமுன்
கூட்டைப் பேணிஸ ரேலின்கு ழாமுனங்
காட்டைச் சுற்றித்தி ரிந்துக ழிந்தவப்
பாட்டைப் போன்றுள தென்னுறு பாடரோ.   

74
     
 

இம்மட் டாகமுன் னேறிச்செல் வேனெனில்
எம்மட் டோசென்றி ருப்பனங் கெட்பக
வம்மட் டோருணர் வற்றயர் வெய்தலால்
மும்மட் டிவ்வழிச் செல்துயர் மூண்டதால்.   

75
     
 

என்று ளக்கசப் போடழு தேங்கியும்
நன்ற தர்க்கிரு பாங்கரு நாடியும்
மன்ற லார்ந்தம துமலர்க் காவணஞ்
சென்றி றுத்தவண் டேடினன் செவ்வியோன்.

76
     
 

கள்ளி ணர்ப்படு தாதுகு காவணத்
துள்ளு றப்புகுந் தொண்ணிதி வைப்பினைத்
தெள்ளி திற்றுரு வித்துயில் செய்தவப்
பள்ளி யுற்றதன் கீழுறப் பார்க்கையில்.     

77
     
 

தன்னு யிர்க்குயி ராயசம் பத்தினை
மன்னு யிர்க்குயி ராகும ருந்தினை
என்னு யிர்க்குமி னியசஞ் சீவியைப்
பொன்னு யிர்க்கும்பொ லன்சுரங் கத்தினை.

78
     
 

விதிவி லக்கின்வி ளக்கைவி சும்புதோய்
மதியை மண்ணுல குக்கென வைத்தமா
நிதியைக் காட்டிநி லவஞ்ச னத்தினைக்
கதியைக் காட்டுமோர் கைவழி காட்டியை.   

79