|
எண்ண
ரும்பொரு ளீதெனக் கண்டெடுத்
துண்ணி கழ்ந்தவுரிமையின் முத்தமிட்
டண்ணல் நாடடைந் தானென வானந்தக்
கண்ணி னீர்வடித் தானுட்க சிந்தரோ.
|
80
|
|
|
|
|
மாண்ட யாக்கைம
றுத்துயிர் பெற்றெனக்
காண்டல் செய்திரு கைத்தலஞ் சென்னியிற்
பூண்டு நல்லுணர் வோடுபு ரந்தர
ஆண்ட கைக்கித யாஞ்சலி யாக்கினான்.
|
81
|
|
|
|
|
இற்றி
தேயெனக் கீறின்மெய் ஜீவனும்
கொற்ற வன்றிருக் கோபுர வாயிலுக்
குற்ற சான்றுமென் றோகையோ டொண்ணெறி
பற்றி யேகினன் கோன்முறை பற்றியே.
|
82 |
|
|
|
|
கங்கு
லூடிரை தேர்கொடுங் கான்விலங்
கெங்க ணுந்திரி யுங்கண்ணெ திர்ப்படில்
நுங்கு மென்னையு மென்றுநு னித்துணர்
புங்க வன்னிடை நின்றிலன் போயினான்.
|
83 |
|
|
|
|
அஞ்சி
யஞ்சிய லக்கணுற் றாரியன்
மஞ்சு லாமலை யுச்சிவ ராமுனம்
எஞ்சி யத்தத்தி றுத்தனன் வான்கதிர்
சஞ்ச லத்திற்ற ரிப்பரி தென்னவே.
|
84 |
|
|
|
|
திக்க
னைத்தும்வி ளக்கிய செங்கதிர்
மைக்க ருங்கட லூடும றைதலிற்
செக்கர் வானொளி தேயுமுன் றீவிரித்
தக்கி ரித்தலை மீதுவந் தண்மினான்.
|
85 |
|
|
|
|
பொழுது
பட்டிருள் பட்டதென் போக்கினிப்
பழுது பட்டிடு மென்னும்ப யத்தினால்
அழுது நொந்தவ லத்தொடு மண்ணல்தாள்
தொழுது நோக்கினன் முற்படு தொன்னெறி.
|
86 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
முற்பட
நோக்குங் காலை முறைப்படு நெறியின் பாங்கர்
கற்பக வுலகை யுள்ளங் கைநெல்லிக் களியிற் காட்டும்
அற்புத வுருக்கொ லீதென் றதிசயம் பயக்கு மாறு
பொற்புற விளங்கித் தோன்றும் புனிதமா ளிகைகண் ணுற்றான்.
|
87 |