பக்கம் எண் :

171

 

திடுக்குறு மிடுக்கண் சேரிற் சித்திர தீபம் போல
நடுக்கமின் றாகி நிற்பர் நல்லுணர் வுடைய நீரார்
அடுக்குந வடுக்கு மென்று மாண்டகை சித்த மன்றிக்
கெடுக்குந வெவைமற் றிந்தக் கிளர்நில வுலகத் தம்மா.   

96
     
 

ஆவது கருதப் பார்க்கி லழிவிலா ஜீவ னோடு
மேவுசா மீப முத்தி வீட்டின்ப முதல வாய
தேவபோ கங்க ளெல்லாஞ் சிறக்கமுன் னுண்டு பின்னே
சாவொடு கவிழ்க்குஞ் செந்தீச் சாகர முண்டு மாதோ.    

97
     
 

துனியெலா மொருங்கு கூடி மலையெனத் தொடரு மேனும்
கனியெனப் படுமாற் றூய பார்த்திவ னருளுண் டாயின்
இனியிடைந் தேக னன்றன் றியலுமட் டாக முன்னே
தனியெதி ரூன்றிப் போத றகவதே தரும மாமால்.       

98
     
 

என்றின வாவி சாரி யெண்ணமிட் டிருண்ட கானிற்
பொன்றிடர் வருவ தேனும புரவலன் புரப்ப ரென்னா
ஒன்றியாய்ச் செல்லுங் காலை யொருதிருத் தேவா ரத்தை
நன்றியோ டுள்ளிப் பண்ணோ டிசைபெற நவின்று போனான்.

99
     
 

        தேவாரம் (பண், இந்தளம்.)

   
 

   'கிறிஸ்துவே எனக்கு எல்லாமாயிருக்கிறார்.'

   
1.



சத்தாய் நிஷ்களமா யொரு சாமிய மும்மிலதாய்ச்
சித்தா யானந்தமாய்த் திகழ் கின்றதி ரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத் தேறுவ னென்பவந்தீர்ந்
தத்தா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
2.



எம்மா விக்குருகி யுயிரீந்துபு ரந்ததற்கோர்
கைம்மா றுண்டுகொலோ கடை காறுங் கையடையாய்ச்
சும்மா ரக்ஷணைசெய் சொல்சு தந்தரம் யாதுமிலேன்
அம்மா னுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
3.



பித்தே றிச்சுழலும் ஜெகப் பேய்பிடித்து துப்பவத்தே
செத்த னுன்னருளாற் பிழைத் தேன்மறு ஜென்மமதாய்
எத்தோ டங்களையும் பொறுத் தென்றுமி ரங்குகவென்
அத்தா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
4.



துப்பார் சிந்தையிலேன் மறைந் தீட்டிய தொல்வினையுந்
தப்பா தேவெளியா நடு நாளெனைத் தாங்கிக்கொள்ள
இப்பா ருய்யவென்றே மனுக் கோலமே டுத்தவெங்கள்
அப்பா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.