5.
|
மையார்
கண்ணிருண்டு செவி வாயதை துக்குழறி
ஐயான் மூச்சொடுங்கி யுயி ராக்கைவிட் டேகிடுநாள்
நையேல் கைநெகிழே னுனை நானுண் டஞ்சலென
ஐயா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
6.
|
வான்றோய்ந்
திட்டதன்றோ தமி யேன்புரி வல்வினைதான்
என்றா னிவ்வுலகில் ஜெனித் தேனென லீடழிவேன்
மூன்றாய் மூன்றுமொன்றாய்த் தொழின் மூன்றுமி யற்றிநின்ற
ஆன்றோ யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
7.
|
திரைசேர்
வெம்பவமாங் கடன் மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்கவென்றே புணை யாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலே னெனைப் பற்றியப் பற்றுவிடாய்
அரசே யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
8.
|
தாயே
தந்தைதமர் குரு சம்பத்து நட்பெவையும்
நீயே யெம்பெருமான் கதி வேறிலை நிண்ணயங்காண்
ஏயே யென்றிகழு முல கோடெனக் கென்னுரிமை
ஆயே யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
9.
|
என்னேர்
பாவியர்தா னுல கத்திலை யென்னினுமுன்
பொன்னே ருங்கழற்கே புக லாக வந்தடைந்தேன்
மன்னே ரக்ஷணிய வமிர் தூட்டும னுப்புரக்கும்
அன்னே யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
10.
|
ஈண்டே
யென்னுளத்தில் விசு வாசவி ளக்கிலங்கத்
தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்துகெ டுத்திடுங்காண்
மாண்டா யெம்பிழைக்கா வுயிர்த் தாயெமை வாழ்விக்கவே.
ஆண்டா யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
|
தேவாரம்
முற்றிற்று
|