பக்கம் எண் :

175

 

பொருட்டிற னறியார் சொல்லும் பொய்யுரைக் கொருகாற் சற்று
மருட்டிமுன் னின்று மெய்மை மறைக்குமோர் வலியுண் டேனும்
அருட்டிற னுடைய நீரா ரவலத்தோ டுரைக்கு மெய்மை
தெருட்டுவா ரறினுந் தானே திகழ்ந்திடுஞ் செவ்வி யுண்டால்.

118
     
 

கடுங்கத மடங்க லேற்றின் கைதப்பி யகன்று போன
அடுங்களி றனையான் சித்த மமைதலுற் றாறி ஜீவன்
நடுங்குற வெதிர்ந்த மோச நாசத்தி லுயிர்தந் துய்த்த
ஒடுங்கலில் கருணைத் தேவை நன்றியோ டுள்ளி யுள்ளி.    

119
     
 

அஞ்சலித் தோகைக் கண்ணீ ரவிழ்ந்துதன் னங்கம் போர்ப்பத்
துஞ்சுறா வன்பிற் பல்காற் றொழுதுதோத் திரித்துப் பாடி
உஞ்சன னளிய னேனென் றுவந்துதன் னெறியிற் சென்றான்
எஞ்சிய கருக்கன் மாயக் காரிரு ளிறுத்த தன்றே.         

120
     
 

             உபாதிமலைப் படலம் முற்றிற்று

 
     
 

                ஆதிபருவம் கவி, 116