பக்கம் எண் :

176

 
இரண்டாவது : குமாரபருவம்
 
 
     
 
சம்பாஷணைப் படலம்
 
 
     
 

வெய்யவ னிறத்தலிற் பரிந்து மேதினித்
தையலாள் துக்கவெந் தழல்சு டச்சுட
மெய்யெலாங் கருதிய விதத்தை மானுமால்
வையக முழுவதும் புதைத்த மையிருள்.          

1
     
 

செஞ்சுட ரவிரொளிப் பிழம்பைத் தீக்குமோர்
நஞ்சிது வென்னவு நாச தேசத்துப்
பஞ்சபா தகத்திரள் படர்ந்த தென்னவும்
விஞ்சிய திருட்குழா மேலுங் கீழுமே.           

2
     
 

அஞ்சுட ரவித்துவந் தகிலம் யாவையும்
வஞ்சனை யுருக்கொடு கரந்து வௌவிய
அஞ்சனக் கருநிறத் தரக்கி யேகொலாம்
செஞ்செவாய் மடுத்துறச் செறிந்த காதிருள்.      

3
     
 

அலைகடற் புவியில்வா ழான்ம கோடிகள்
நிலைதபக் கொடுந்தொழி னினையும் பேய்க்கணத்
தலைமக னிடைக்கிடை வீசு தந்திர
வலையென விரவிருள் வளைந்த தெங்குமே.      

4
     
 

பள்ளநீ ருலகெலாம் படிந்த வெந்நிசி
நள்ளுந ராமென நடித்து நாடருள்
கள்ளமும் வஞ்சமுங் கரந்த கைதவர்
உள்ளமு நரகபா தலமு மொத்தவே.           

 5