|
இத்தகு
தலத்திடை யிரவு தங்கியான்
நித்திரை தெளிந்துத யாதி நீங்கவெற்
குத்தரங் கிடைக்குமோ வுலங்கொ டோளினாய்
எத்திற நுங்கருத் தியம்பு வாயென்றான்.
|
14 |
|
|
|
|
எள்ளருங்
கடைத்தலை யேந்தன் மற்றிவன்
உள்ளமும் வாக்குமொத் துளது போலுமால்
கள்ளமி னீர்மையன் கருதுங் காலெனா
ஒள்ளியோய் கேளென வுரைத்தன் மேயினான்.
|
15
|
|
|
|
|
அரும்பிய
மெய்விசு வாசத் தாலகந்
திரும்பியுன் னதநகர் சேர யாத்திரை
வரும்பர தேசிகள் வதிந்து போதர
விரும்பியங் கமைத்ததிவ் விநோத மாடங்காண்.
|
16
|
|
|
|
|
வித்தக
விவேகிசொல் விநய யூகிமெய்ப்
பத்திநற் சிநேகியென் றுரைக்கும் பார்ப்பன
உத்தமி நால்வரிங் குளர்மற் றொண்ணிலைச்
சித்திர மாளிகை யகத்துச் செவ்வியோய்.
|
17
|
|
|
|
|
கைவரு
தவநிரை யியற்றுங் கன்னியர்
தெய்விக சுருதிநன் குணர்ந்த செவ்வியர்
மெய்வரு நாவினர் விதேக முத்தர்போல்
ஐவரை யறுவரா யமைத்த வாருடர்.
|
18
|
|
|
|
|
மற்றிவர்
சீலமு மறைமெய்ஞ் ஞானமும்
பற்றறுத் தியோகுசெய் பரிசுந் தெள்ளிதின்
உற்றறி யஃதுனக் குறுதி யாமெனச்
சொற்றுடன் யூகியை விளித்துச் சொல்லுவான்.
|
19
|
|
|
|
|
அம்மகேள்
நாசதே சத்த னாமிவன்
நம்மசீ யோன்மலை நணுகு மாசையால்
இம்மலை யேறிவந் திடர்ப்பட் டெஞ்சியோன்
செம்மையை யறிந்தினிச் செய்வ செய்மினோ.
|
20
|
|
|
|
|
என்றினி
துரைத்திட விசைந்து வைதிக
நன்றிகொண் மடவரல் நம்பி யெங்குளை
ஒன்றியிவ் வழிவர வுற்ற தென்னையோ
இன்றெலாம் புலப்பட யியம்பு கென்றனள்.
|
21
|