|
தாயெனப்
பரிவுடன் வினவுந் தையலாள்
சேயுயர் மதிமுக நோக்கிச் செவ்விய
தூயவன் றன்வர லாறு தொன்றுதொட்
டேயவை சுருக்கிநன் கியம்பி னானரோ.
|
22
|
|
|
|
|
கேட்டனள்
யூகியென் றுரைக்குங் கேதமில்
வாட்டடங் கண்ணினள் மற்றை மூவரைக்
கூட்டின ளிவனிளை குறிகு ணங்களைக்
காட்டினள் கைநெல்லிக் கனியின் வாய்மையால்.
|
23 |
|
|
|
|
காரிகை
யூகிசொற் கருத்தை யோர்ந்தவர்
சீரிய னிவன்செயல் செவ்வி தாதலிற்
கூரிய தவநிலை குறித்துப் பேசுதும்
ஆரிய வருகவென் றழைத்துப் போயினார்.
|
24
|
|
|
|
|
முன்பொரு
பற்றிலர் முகங்கண் டோரிலர்
பின்பெதுங் குறித்திலர் பேணுஞ் செய்கையோ
டென்புநெக் குருகித்தம் மினத்தொ டேற்றனர்
அன்பெதுங் கருதிடா தளிக்கு நீரதே.
|
25
|
|
|
|
|
அறப்பெருஞ்
சாலையை யடுக்குங் காற்பலர்
புறப்படூஉ வெதிர்ந்தருள் பொழியுங் கண்ணினார்
மறப்பரு நன்மொழி வழங்கி வாழ்த்தினார்
சிறப்பொடு பூசனை செய்யுஞ் செய்கையார்.
|
26
|
|
|
|
|
புவனபோ
கங்களைப் புதைத்திட் டாத்தும
கவனமுற் றருநெறி கடைப்பி டித்தவன்
உவகையோ டுபசரித் துறவு காட்டுமத்
தவநிலை முதியரைத் தாழ்ந்து போயினான்.
|
27
|
|
|
|
|
ஆங்கொரு
சார்பினி லழகு வீற்றிருந்
தோங்கிய தவளமா ளிகையி னுள்ளுறப்
பூங்கொடி மடந்தையர் புகுந்து புங்கவ
ஈங்கினி திருக்கவென் றிருக்கை யீந்தனர்.
|
28
|
|
|
|
|
நன்றியோ
டாசனத் திருந்து நம்பனை
ஒன்றிய சிந்தையோ டுவந்தி றைஞ்சினான்
துன்றிய வுபாதிதொக் கடர்ந்த சூழலில்
பொன்றிடா வகைதனைப் புரந்த துள்ளியே.
|
29
|