|
அவ்வயிற்
சிலதிய ரடுத்தங் கேந்திய
திவ்விய பானநீ ரருந்திச் சிந்தையிற்
கவ்வையின் றாயிருந் தரங்கின் காட்சியைச்
செவ்விதி னோக்கினன் றிகைத்துள் ளுன்னுவான்.
|
30
|
|
|
|
|
புண்ணியங்
குடிபுகப் புதுக்கு மாடமோ
கண்ணிய வருந்தவக் கழகந் தான்கொலோ
தண்ணளி யுறைவதற் கியன்ற சாலையோ
மண்ணுல கிறுத்தபே ரின்ப மாடமோ.
|
31
|
|
|
|
|
துறைதொறு
மாரணத் துழனி தூயநாட்
டிறைதிருப் புகழ்விளக் கினிய பாட்டிசை
மறைமொழி வழாதமா டகநல் யாழிசை
நிறையுமா லிதுவுமோர் நிமல வீடுகொல்.
|
32
|
|
|
|
|
வெண்ணிலா
வுமிழ்சுதை மிளிர்ந்த பித்தியிற்
றிண்ணிய சுருதியிற் றெளிந்த நீர்மைய
கண்ணடிப் படிவங்கள் ககன கோளத்தின்
வண்ணமித் துணையென வகுத்துக் காட்டுமால்.
|
33 |
|
|
|
|
மாயமில்
துளத்திடை வந்து தைவிக
தூயவா வியினரு டுன்னு மாறுபோல்
மேயசா ளரந்தொறும் வீசு மிவ்வகத்
தேயவ ருடல்புள கேறத் தென்றலே.
|
34
|
|
|
|
|
பொறிக்கெலா
நலந்தரு புனித மாப்புலன்
செறிக்குமாற் சிந்தனை தெருட்மடு மாலற
நெறிக்கெலாந் துணையென நிலவு மானில
வெறிக்குமா ளிகையிதை யென்னென் றுள்ளுகேன்.
|
35 |
|
|
|
|
இன்னண மதிசயித்
தெண்ணி வேதியன்
தன்னுளே யுவந்தன னிருப்பத் தண்ணளி
துன்னிய முத்தவத் தோகை மாரவன்
முன்னுற விருந்திவை மொழிகு வாரரோ.
|
36 |
|
|
|
|
அரசிளங்
கோமகற் கன்வு செய்யுமெய்ப்
பரிசுடை யையவெம் பக்க னீவரும்
வரிசைபெற் றனமெனு மகிழ்ச்சி யுண்டெமக்
குரைசெயுந் தரத்ததன் றுண்மை நூல்வலாய்.
|
37 |