|
குருதி
காட்டிய சிலுவையை நினைப்பதுங் கோதில்
சுருதி நூலையுய்த் துணர்வதுந் துகிலையுன் னுவதும்
வருதி றத்தமா மகிமையை மதப்பதுஞ் சுபாவந்
தருது ரிச்சையைக் களையுமெய்ச் சாதன சதுஷ்கம்.
|
70 |
|
|
|
|
தீய
சிந்தையைச் செகுப்பதுஞ் செம்மையிற் றிறம்பா
மாய மற்றநற் கிரியையை வளர்ப்பது மயங்கி
மேய சோதனைக் கெதிருற விறல்கரு வதுமெற்
கேய வத்தகு சாதன சதுஷ்கமே யென்றான்.
|
71 |
|
|
|
|
ஆரி
யன்சொலக் கேட்டலு மாரண விவேகி
சீரி தாமெனச் சிந்தையுள் வியந்துநீ சீயோன்
மேரு மாமலை யாத்திரை விளைந்ததென் விருப்பங்
கூரி யோயெது குறித்துள கூறுதி யென்றாள்.
|
72 |
|
|
|
|
இலகு
வாண்மதி முகத்தினா யென்னுயிர்த் தோழர்
உலக லாமுயக் கொண்டவர் வினைச்சுமை யொழித்தோர்
அலகி லாமகி மைப்பிர தாபமோ டாங்கு
குலவி வீற்றிருத் தலைக்கண்டு களிப்பதோர் குறிப்பால்.
|
73
|
|
|
|
|
இம்மை
யேயெனை யீடழித் திடுபல விடுக்கண்
வெம்மை மிக்கபல் வேதனை விடயங்க ளெதுவும்
அம்மை யிற்புகா தமிமர ணமுமிலை யாங்கு
செம்மை சேர்மதி மற்றிதோர் சிந்தனை தெரிநீ.
|
74 |
|
|
|
|
பிணங்கு
றாமனப் பெருந்தகை யவரொடும் பிரியா
திணங்கி வாழ்வது மெம்பிரா னடிசிரத் தேந்திக்
குணங்க ளைப்புகழந் தேத்தியின் னிசையொலி கூட்டி
வணங்கி நிற்பது மெனக்குள மற்றொரு வாஞ்சை.
|
75 |
|
|
|
|
இத்த
கைப்படு திடவிசு வாசத்தை யெனக்குள்
உய்த்திம் மட்டுமா தரித்துநின் றுறுதுணை யாகி
எத்தி றத்தினும் பாதுகாத் தளிப்பதெம் மிறைவன்
வித்த கப்புனி தாவியின் செயலென விண்டான்.
|
76
|
|
|
|
|
சீர்மை
யுற்றமெய்ப் கிறிஸ்தவன் றிடவிசு வாச
நீர்மை யுற்றறிந் தாமிது நிண்ணய மென்னாக்
கூர்மை யுற்றநல் விவேகியுட் குதுகலித் திருப்ப
நேர்மை யுற்றசி நேகிமற் றின்னன நிகழ்த்தும்.
|
77
|