|
நாய
கன்புனி தாத்துமம் நைந்ததும்
மீயி ரத்தவெ யர்த்துளி வீழ்த்ததும்
ஏய தின்னண மென்றெடுத் தோதவாய்
ஆயி ரம்மிலை யாயுவு மற்பமால்.
|
110 |
|
|
|
|
பெருகு
மன்பிற்பி ணித்தவப் பெற்றியை
உருகு முள்ளத்திர் யானுரை செய்வதற்
கருகி யல்லென்மற் றாயினு மாவியின்
திருவ ருட்கொட றிந்தன செப்புகேன்.
|
111 |
|
|
|
|
என்று
பன்னியி கபர சாதனம்
நன்று ணர்ந்தந லங்கிளர் பத்தியாந்
துன்றி ருங்குணத் தோகைதன் சிந்தனை
ஒன்றி யீசன ருட்டுணை யுன்னுவாள்.
|
112
|
|
|
|
|
சம்பாக்ஷணைப்
படலம் முற்றிற்று
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
(ஸ்தோத்திரம்)
|
|
|
|
|
அகில
லோகம்ப டைத்தளித் தன்பினாற்
சகல மன்னுயி ருங்கதி சார்ந்துய
மகவை நல்கிய மாண்புறு தாதையாம்
பகவ னுக்கித யாஞ்சலி பண்ணுவாம். 1
|
பொழிப்புரை.
உலகமெல்லாம் படைத்துக் காப்பாற்றி, அங்குள்ள
சகல மானிட ஜீவன்களும் மோட்ச கதியை யடைந்து சுகிக்குமாறு
அவர்கள் பேரிலுள்ள அன்பினால் தன் குமாரனை பலியாகக் கொடுத்த
மகிமை தங்கிய பிதாவாகிய கடவுளுக்கு மனதால் வணக்கம் செய்வோமாக.
|
வேறு
|
|
உலகமகிழ்ந்
தீடேறப் பரலோக வாசிகளுக் குவகை யேற
அலகையுளந் திகிலேற வகண்டபரி பூரணனா ரருண்மெய் வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நரவுருவாய் விளங்கி யன்பாற்
சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியனடியைச் சிந்தை செய்வாம்.
2
|
(பொ
- ரை) உலகத்திலுள்ள மானிடர்கள் சநதோஷத்துடன் கடைத்தேறவும், மோட்சத்திலுள்ளவர்கட்டு
ஆனந்த முண்டாகவும், சாத்தான் மனதில் பயமுண்டாகவும், எங்கும் நிறைந்த கடவுளது அருள்
|