| |
சிந்தை
தேருந்தி ருத்தகு தெய்விக
மைந்த னோர்ந்தும னங்கலங் காதிர்நீர்
எந்த வாவியும் யானுறு மானவ
விந்தை யாக்கைப டைத்தில மெய்ம்மையால்.
|
470 |
| |
|
|
| |
பாரு
மின்பரி சித்தென்ப தாதியை
ஒரு முன்னுரை யானன்றி யுண்மைவே
றாரு மில்லர்மற் றையுற லீரெனாத்
தேரு மாறுதெ ருட்டினர் சிந்தனை.
|
471 |
| |
|
|
| |
மேலு
மேலும்ப லமுறை வித்தகக்
கோலங் காட்டிக்கு ரவர்க்குக் கோதறு
சீல மல்கத்தெ ரித்தனர் செம்பொருள்
ஞால மீதொரு மண்டல நாடியே.
|
472 |
| |
|
|
| |
ஆதி
மெய்யடி யார்திறத் தன்றியும்
பாதி யாயிர வர்க்கொரு பக்கலிற்
பூத லத்திலு யிர்த்தெழு புண்ணிய
நாதன் சேவைய ளித்தனர் நன்குற.
|
473 |
| |
|
|
| |
இத்தி
றங்கிறிஸ் தியேசுவி னீறிலா
மெய்த்த வத்திரு மேனிவி ளங்கலிற்
சித்த சஞ்சல நீங்கித்தி கழ்ந்தனர்
சுத்த மெய்விசு வாசத்திற் றோமிலார்.
|
474 |
| |
|
|
| |
அஞ்சி
நெஞ்சம ழுங்கிய யர்ந்துவீழ்ந்
துஞ்ச காவல ரோடியு லப்பிலான்
எஞ்சு றாதவெ ழுச்சியும் யாவையும்
வஞ்ச கக்குர வர்க்குவ குத்தனர்.
|
475 |
| |
|
|
| |
பங்க
முற்றப திதர்ப லர்குழீஇச்
சங்க முற்றுநந் தாபத ரேகரந்
தங்கம் வௌவிய கன்றன ரென்னவவ்
வெங்க ணார்க்குவெ றுக்கையை வீசினார்.
|
476 |
| |
|
|
| |
களியர்
பொய்ப்படு கட்டுரை யோபுவி
தெளியுந் தெய்விக மெய்ம்மைசி தைத்திடும்
அளிய புன்மதி யாதித ருக்கனார்
ஒளிபு தைந்திடு மோவிர லொன்றிலே.
|
477 |