| |
மன்ன
னஞ்சிவ றிதுள மாழ்கினன்
ஒன்ன லார்நெஞ்சு ரங்கிழி பட்டனர்
பன்ன லாந்தர மன்றுவெம் பாழ்மதி
துன்னி யோரெவ ருந்துணுக் குற்றனர்.
|
478 |
| |
|
|
| |
பத்தர்
யாரும்ப வித்திர சிந்தையின்
உத்த மவிசு வாசத்து ரத்தலின்
மத்தர் வாயடை பட்டும றங்கிளர்
சித்த மாழ்கிய டங்கிய செவ்விவாய்.
|
479 |
| |
|
|
| |
வேறு |
|
| |
|
|
| |
உம்பர்
நாயக னுயிர்த்தெழுந் தருளிய வுண்மை
இம்பர் மெய்ப்படுத் தீரிரு பதுதினத் திறுதி
கொம்பி றாலிழிந் தொழுகொலி வாசலங் குறுகி
நம்பு தொண்டர்க்கு வேதியர்க் கிவையிவை நவிலும்.
|
480 |
| |
|
|
| |
நண்பு
ளீருல கெங்கணு நரசமு ஹங்கட்
கெண்பெ றுஞ்சுவி சேஷத்தை யியம்புமி னிதயக்
கண்ப டைத்தவன் கதிநலம் பெறுகுவன் காணும்
பண்பி லாதவ னாக்கினைத் தீர்ப்பினுட் படுவான்.
|
481
|
| |
|
|
| |
கண்டு
கேட்டமெய்ச் சான்றுநீர் கருதிலென் றந்தை
விண்ட வாறினி யருட்பலம் விண்டலத் திழிந்து
மண்ட லத்துமை மருவுமட் டெருசலே மருவித்
தொண்ட ரீர்மலங் காதவண் டரித்திருந் துன்னி.
|
482 |
| |
|
|
| |
ஒன்றி
நும்முட ரிருப்பன்யா னுலகமுள் ளளவும்
என்று வாய்மையி னிலகுசெவ் வாய்மலர்ந் தியம்பி
நின்றெ ழிற்றிருக் கரங்களை வானுற நிமிர்த்தி நன்று
மங்கல விடையரு ளாசியு நவின்றார்.
|
483 |
| |
|
|
| |
ஆசி
மங்கள சாதன மருளிய வமையம்
மாசி லாவருண் முகிலையோர் மழைமுகில் வளைப்பத்
தேசு மல்கிய திருவுருக் காண்கிலார் சீடர்
மூசு பைம்புயல் விசும்புற முடுகுதல் கண்டார்.
|
484 |
| |
|
|
| |
மிக்க
பேரதி சயத்தொடு மேலுற நோக்கித்
தொக்கு நின்றவே தியர்மருங் கோரிரு தூதர்
புக்கிவ் வாண்டகை யேகிய புதுமையே போல
மைக்க ரும்புயன் மீதுற மீண்டினி வருவார்.
|
485 |