|
அன்று
தொட்டருட் குருபரம் பரைநிய மத்தால்
இன்று காறுநின் றவித்தையை யிகலற நூறி
ஒன்றி யாலம்வித் தீண்டல்போ லுலகெலாம் பரம்பிக்
குன்று றாதுமெய்த் திருச்சபை குலவுகின் றதுகாண்.
|
494 |
|
|
|
|
அனந்தர்
நீக்கிமெய் யறிவினைக் கொளுத்தியாண் டகைபான்
மனந்தி ருப்பிர க்ஷணைவிசு வாசத்தை வளர்த்துத்
தினந்தி னம்புதி தாக்கியான் மாக்களைத் தெருட்டல்
அனந்த மங்கள வாவியி னருட்செய லறிதி.
|
495 |
|
|
|
|
இரக்ஷணிய
சரிதப் படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இத்திறந
ராத்துமவி ரக்ஷணைமு டித்த
வித்தகச ரித்திரம்வி ரித்தினிது ரைக்க
உத்தமகி றிஸ்தவனு ணர்ச்சியொடு கேட்டே
பத்திமுக நோக்கிவிந யத்தொடிவை பன்னும்.
|
1 |
|
|
|
|
ஆசறும
னத்தியென தன்னையரு ளாளன்
பேசரிய பாடுகள்பி றங்குசரி தத்தை
மாசில்விசு வாசநனி மல்கியுர மாக
நேசமொடு ணர்த்திணையெ னெஞ்சிடைய ழுந்த.
|
2 |
|
|
|
|
பூவலய
முய்யவரு புண்ணியமு நித்ய
ஜீவநிலை யும்மினிது சித்திபெறு மாறும்
ஓவறவி ளக்கினையி தோர்ந்தளிய னாற்ற
ஆவதுகொ னிற்கொருகைம் மாறுபிறி தம்மா.
|
3 |
|
|
|
|
பண்டைமறை
பன்முறைப டித்துமுள னேனும்
ஒண்டொடிநின் வாய்மொழிக ளுட்பொருளு ணர்த்தும்
எண்டகுவி ளக்கமித யத்தொளிர வைத்தாய்
அண்டருல கெய்துவரை யும்மவிவ தின்றால்.
|
4 |
|
|
|
|
நன்மையளி
யேமுறந லந்திகழு நம்பன்
கொன்மலித ருங்குருசி லேகுருதி சிந்தித்
தன்மனமு வந்துதலை சாய்த்ததிருக் கோலம்
என்மனவி ழிக்கெதிரி லென்றுமுள தெம்மோய்.
|
5 |