|
நொந்துவதை
யுண்டதிரு மேனியுநொ றுங்கிச்
சிந்துதிர மும்புனித ஜீவவுண வாகும்
சந்ததநு கர்ந்துவரு சாதகம்வி ளைக்கும்
விந்தையுறு சிற்சுகமி தேயென்விசு வாசம்.
|
6 |
|
|
|
|
இற்றையிர
வும்மிடமி றுத்தரிய போதம்
உற்றதும கேசனரு ளுற்றுதவு பேறாம்
நற்றவந லத்தியென நன்றியறி தக்க
பெற்றியன்வ ணக்கமொடு பேசினன்வ ழுத்தி.
|
7 |
|
|
|
|
ஏனையரு
நன்றிதெரி யின்னுரையி யம்ப
ஆனனம லர்ந்தனைவ ரும்மமுத மன்ன
போனகம மைந்துவர வுண்டுபுது மைத்த
தூனறிய சிற்சுவைய பானநறை துய்த்தார்.
|
8 |
|
|
|
|
மருந்தனைய
தைவிகம காகருணை மல்கும்
விருந்தினித ருந்தியபின் மெய்யுணர்வி னுள்ளந்
திருந்தடியர் நன்றியொடு செம்மலையி றைஞ்சிப்
பொருந்துதுதி தோத்திரமுறைப்படிபு கன்றார்.
|
9 |
|
|
|
|
மற்றிவைநி
கழ்ந்தபின மாண்பினர்ம கிழ்ச்சி
உற்றொருவ ருக்கொருவ ரன்பின்விடை யுய்ப்ப
நற்றவனு மங்கவர்ந யந்தினித ளித்த
விற்றவழு மாளிகையின் மேனிலைபு குந்தான்.
|
10 |
|
|
|
|
ஜீவவச
னத்திருவி ளக்கொளிதி கழ்ந்து
மேவகவி ருட்டறவி ளக்கவிசு வாசத்
தாவலொடு மாண்டவரு ளாசனம டுத்துப்
பாவலர டைக்கலவி யற்றமிழ்ப டிப்பான்.
|
11 |
|
|
|