3. |
கலைக்கணுக்
கரிய காட்சியே சிரத்தைக் கண்ணினுக்
கெளியகண் மணியே
புலைக்குடி லோம்பும் புன்மதி யதனாற் பொருவரும்
பொழுதைவீண் போக்கி
உலைக்கம டம்போ லுலகமா யத்தை யுவந்தநின்
மூடனென் றுளச்சான்
றலைக்கநொந் தடியே னின்சர ணடைந்தே னஞ்சலென்
றடைக்கல மருளே. |
|
|
4. |
மண்டலெத்
தெனைப்போற் பாவியுமில்லை மற்றுனைப்
பொருவதோர் தெய்வம்
உண்டொருக் காலென்றுணர்வுளா ரெவரு முரைத்திடா
ருண்மை யாதலினால்
தொண்டருக் கிரங்கி மநுவுரு வெடுத்த தொல்லைமூ
லப்பரஞ் சுடரே
அண்டருக் கரசே நின்சர ணடைந்தே னஞ்சலென்
றடைக்கல மருளே.
|
|
|
5. |
வெப்புறு
பாவ விடத்தினைப் பருகி மெய்யறி விழந்துனை
மறந்தேன்
அப்புற வுலக மடுக்கிலென் செய்கே னாண்டெனக்
காதர வியாரே
ஒப்புற வுயர்ந்த வொருதனி முதலே யுணர்வுடை
யோலத்துக் குருகும்
அப்பனே யடியே னின்சர ணடைந்தே னஞ்சலென்
றடைக்கல மருளே. |
|
|
6. |
எனாதிய
னென்னு முடல்பொரு ளாவி யிவையொரு
மூன்றையு மின்னே
உனாதென வுனக்கே கையளித் தெளியே னுன்னருட்
பற்றையே யுவந்து
மனாதிதத் துவங்கட் கதீதமா யன்பர் மனத்தவி சுகந்துவீற்
றிருக்கும்
அநாதர க்ஷகனே நின்சர ணடைந்தே னஞ்சலென்
றடைக்கல மருளே. |
|
|
7. |
படித்தொழும்
பாகிப் பதைத்துழல் வேனைப் பரிந்துன
தருள்வழி பரப்பிக்
குடித்தொழும் பாக்கிக் கொண்டகோ மானே குன்றிடா
விழுநிதிக் குவையே
மிடித்தொழும் பினையு மகற்றிடா தென்னோ விநயமே
தும்பிறி துளதோ
அடித்தொழும் பலனோ வப்பனே யடியேற் சஞ்சலென்
றடைக்கல மருளே. |
|
|
8. |
உருளுறு
சகடம் போலவென் மனமு மொருவழி
நிலையிலா துழலும்
மருளுறு முலகோ டலகையுங் கொடிய மாயமாம்
வலையிடைப் படுத்துந்
தெருளுறு பொருளே நின்னடிக் கன்பு செய்துநா னுய்யுமா
றெங்ஙன்
அருளுறு மெந்தாய் நின்சர ணடைந்தே னஞ்சலென்
றடைக்கல மருளே. |
|
|
9. |
என்புதோல்
போர்த்த யாக்கையைச் சதமென்
றெண்ணியாத் துமத்தை யெட் டுணையும்
முன்பினெண் ணாது புரிந்ததீ வினையென் முன்புநின்
றுடற்றலான் முதிர்பேர்
இன்பநாட் டரசே புண்ணியப் பொருப்பே யிருநிலம்
புதைத்தெழுந் தோங்கும்
அன்பினார் கலியே நின்சர ணடைந்தேன
ஞ்சலென்றடைக்கல மருளே.
|