பக்கம் எண் :

274


10 . புறத்தொரு புகலு மிலையுனை யல்லாற் பொய்யுறு
                          மலகையின் புணர்ப் பாம்
முறத்தினிற் புடையுண் டயருவேன் கருணை முளரியை
                               மூடுதன் முறையோ
மறத்தியோ மாறா மெய்திரு வாக்கை வரதனே யபயனே
                                       வண்மை
அறத்தனி முதலே நின் சரணடைந்தே
                      னஞ்சலென்றடைக்கல மருளே.

 
11. மருண்மனோ வாஞ்சைச் சுழலிலே யுழலும்
                        வறியபுன்றிரணமென் னாவி
இருண்மலோ ததிபுக கழுந்திடி லந்தோ வென்செய்கே
                              னேழை நின்னடிமை
தெருண்மனோ கரமே ஜீவதா ரகமே திகழ்குண மேருவே
                                        சீர்சால்
அருண்மகோ ததியே நின்சர ணடைந்தே னஞ்சலென்
                               றடைக்கல மருளே.
 
12. வேதமே வேத விளக்கமே விளக்கின் விழுத்தகு ஜோதியே
                                        விமல
போதமே போதங் கடந்தமெய்ப் பொருளே பொருள்புலப்
                                 படவெளி வந்த
நாதமே யூத குலநரா திபனே நன்னெறி பிழைத்துல
                                        குழலும்
ஆதனா னடியே னின் சரணடைந்தே னஞ்சலென்
                               றடைக்கல மருளே.
 
13. வாழியா ரணநூல் வரம்பெலா மிகந்து மதியிலாப்
                            பேதையான் மயங்கிக்
கீழியான் பிழைத்த பிழையெலாம் பொறுத்துன் கீருபைதந்
                               தருளெனக்கெஞ்சி
ஊழியா யூழிக் குறையுளா யெவையு முலப்பினு
                               முலப்பிலாத் தரும
ஆழியா யடியே னின்சர ணடைந்தே
                       னஞ்சலென்றடைக்கலமருளே.
             தேவாரம் முற்றிற்று.

   
கையடையெ னப்புனைக வின்கொள்பதி கத்தை
மெய்யுணர்வோ டுள்ளுருகி விண்டுமறை வாணன்
மையறவி ளக்குவிசு வாசவணை மேவிச்
செய்யகண்மு கிழ்த்தமைதி யோடுதுயில் செய்தான்.
12
 
கண்டுயிலி லாதுலகு காவல்புரி கின்ற
அண்டர்பெரு மான்சரண டைக்கலம மைந்து
தண்டரள வெண்ணகையர் தத்தமத ரங்கிற்
கண்டுயில்வ திந்தனரக் கங்குல்கழி காறும்.
13
 
எண்ணில்பல கோடியபி ராணிகளு மெல்லாங்
கண்ணிமைய டைத்தனவ டைத்தனக பாடம்
அண்ணலரு ளாணையின் ருங்கடிய மைந்த
விண்ணிலவு தூதர்கண மெங்கணும்வி ராய.
14